மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 18ம் தேதி வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்தப்படத்தில் நித்யா மேனன், பாரதிராஜா, பிரகாஷ்ராஜ், ராஷி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் வெளியாகி உலக அளவில் 100 கோடி வசூல் செய்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த படம் தந்த வெற்றியால் தனுஷ் அடுத்தடுத்து தான் நடிக்க உள்ள படங்களின் சம்பளத்தை அதிகரித்துள்ளாராம். சுமார் ரூ.20 கோடியில் இருந்து ரூ.30 கோடியாக அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர் .