ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
மணிரத்னம் இயக்கத்தில் ‛பொன்னியின் செல்வன்' நாவல் அதே பெயரில் படமாக இரண்டு பாகங்களாக பிரம்மாண்டமாய் உருவாகி உள்ளது. விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்ய லட்சுமி, ஜெயராம், சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ் ராஜ், விக்ரம் பிரபு உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். செப்., 30ல் முதல்பாகம் வெளியாக உள்ளது.
ஏற்கனவே படத்தில் ஆதித்ய கரிகாலனாக நடிக்கும் விக்ரம், வந்தியதேவனாக நடிக்கும் கார்த்தி, அருள்மொழி வர்மனாக நடிக்கும் ஜெயம் ரவி, நந்தினியாக நடிக்கும் ஐஸ்வர்யா ராய், குந்தவையாக நடிக்கும் திரிஷா உள்ளிட்டோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகின. தொடர்ந்து டீசர், இரண்டு பாடல்களும் வெளியாகி வரவேற்பை பெற்றது. அடுத்து செப்., 6ல் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா பிரம்மாண்டமாய் நடைபெற உள்ளது.
இந்நிலையில் மேலும் சில நடிகர்களின் கேரக்டர்கள் மற்றும் அவர்களின் போஸ்டர்கள் வெளியாகி உள்ளன. அந்தவகையில் பெரிய பழுவேட்டரையராக சரத்குமார், சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன் ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது. இப்போது பூங்குழலியாக ஐஸ்வர்ய லட்சுமியும், வானதியாக சோபிதா துலிபாலாவும் நடிக்கின்றனர். இவர்களுடன் சுந்தர சோழனாக பிரகாஷ் ராஜ், செம்பியான் மாதேவியாக ஜெயசித்ரா, மதுராந்தனாக ரகுமானும் நடிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.