இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

இயக்குனர் பாரதிராஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார், கடந்த வாரம் வெளியான திருச்சிற்றம்பலம் படத்தில் தனுஷின் தாத்தாவாக சிறந்த நடிப்பை அவர் வழங்கியதற்காக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த வேளையில் இப்படி அவர் மருத்துவமனையில் உடல் நலம் இல்லாமல் சிகிச்சை பெற்று வருவது ரசிகர்களை மட்டுமல்ல அவரை மானசீக குருநாதராக வழிபடும் திரையுலகினருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவரால் அறிமுகம் செய்யப்பட்டு முன்னணி கதாநாயகியாக வலம் வந்து, இப்போதும் திரையுலகில் தனக்கென தனி இடம் பிடித்திருக்கும் நடிகை ராதிகாவிற்கும் இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது பிரான்சில் இருக்கும் ராதிகா அங்கே உள்ள லூர்து சர்ச்சில் மெழுகுவர்த்தி ஏற்றி பாரதிராஜா விரைவில் நலம் பெற்று திரும்ப வேண்டும் என பிரார்த்தித்துள்ளார்.
இது குறித்த வீடியோ ஒன்றையும் சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ள ராதிகா, “என் இனிய டைரக்டர் பாரதிராஜா அவர்களே.. நீங்கள் விரைவில் நலம் பெற்று திரும்ப என்னுடைய சிறப்பு பிரார்த்தனை.. உங்களிடம் பேசுவதை ரொம்பவே மிஸ் பண்ணுகிறேன்” என்று அதில் குறிப்பிட்டுள்ளார் ராதிகா.