தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
தமிழ் சினிமாவில் துணிச்சலான நடிகைகளில் ஒருவர் ஆண்ட்ரியா. வட சென்னை படத்தில் அரை நிர்வாணமாக நடித்தார். பிசாசு 2 படத்தில் நிர்வாணமாக நடித்துள்ளார். இதுதவிர தரமணி, பச்சைக்கிளி முத்துச்சரம், விஸ்வரூபம், துப்பறிவாளன் படங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.
ஆங்கிலோ இந்திய பெண்ணான ஆண்ட்ரியாவின் குடும்பம் பெல்ஜியத்தில் வசித்து வருகிறது. ஆண்ட்ரியா மட்டும் சென்னையிலேயே தங்கி இருந்து படிப்பு, நடிப்பு, மாடலிங், தியேட்டர் ஆர்ட்டிஸ்ட் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் ஆண்ட்ரியாவின் தங்கை நாடியாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்ட்டது. நாடியா தன்னுடன் பணியாற்றிய பெல்ஜியத்தை சேர்ந்த செட்ரிக் என்பவரை காதலித்து வந்தார். அவரையே கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார்.
இந்த திருமணத்திற்காக பல வருடங்களுக்கு பிறகு பெல்ஜியம் சென்ற ஆண்ட்ரியா தங்கையின் திருமணத்தில் கலந்து கொண்டதோடு பெற்றோருடன் சில நாட்கள் தங்கி இருக்க முடிவு செய்து அங்கேயே இருக்கிறார்.
இதுகுறித்து ஆண்ட்ரியா கூறும்போது “நமக்கு நெருக்கமான உள்ளங்கள் உலகில் மிகவும் குறைவு. அப்படியான அன்பானவர்களை சேர்ந்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. அந்த சந்தோஷத்தை எனது குடும்பம் தற்போது அனுபவித்து வருகிறது. நீண்ட காலத்திற்கு பிறகு எனது குடும்பத்தோடு நேரம் செலவு செய்யும்போது என்னை நானே மறந்து போகிறேன். ஒரு பறவை போல பறந்து கொண்டிருக்கிறேன்” என்கிறார்.