மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? | மகளிர் ஆணையத்தில் மனைவியுடன் நேரில் ஆஜரான மாதம்பட்டி ரங்கராஜ் | படப்பிடிப்புக்கு 5 நாட்களுக்கு முன்புதான் பைசன் படத்தின் ஸ்கிரிப்டை படித்தேன்! - துருவ் விக்ரம் | ‛உஸ்தாத் பகத்சிங்' படத்தில் இணைந்த பார்த்திபன் | பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு : நடிகர் விஷால் பதிலளிக்க உத்தரவு | 'கோச்சடையான்' பட விவகாரம் : ரஜினி மனைவி லதாவுக்கு சிக்கல் | விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் தமிழ்நாட்டு தியேட்டர் உரிமையை வாங்கிய ரோமியோ பிக்சர்ஸ்! | மோகன்லாலை தொடர்ந்து சிரஞ்சீவிக்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன்! |
நயன்தாரா நடித்த 'அறம்' படத்தை இயக்கிய கோபி நயினார் தற்போது இயக்கி உள்ள படம் 'மனுஷி'. இதில் ஆண்ட்ரியா முதன்மை வேடத்தில் நடித்துள்ளார். போலீஸ் லாக் அப்பில் ஒரு இளம் அனுபவிக்கும் சித்ரவதைகளே படத்தின் கதை. இந்தப்படம் தணிக்கைக்கு சென்றபோது படத்தில் 37 ஆட்சேபகரமான காட்சிகளும், வசனங்களும் இடம் பெற்றுள்ளதாக கூறி, இப்படத்துக்கு சான்றிதழ் வழங்க தணிக்கை குழு மறுத்தது.
இதை எதிர்த்து தயாரிப்பாளர் வெற்றிமாறன், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதபதி படத்தை பார்த்தார். பின்னர் நீதிமன்றம் அளித்த உத்தரவில் “மனுஷி படத்தில் கடவுள், அறிவியல் நம்பிக்கை, சித்தாந்தம், அடையாளம் ஆகியவை குறித்து வெளிப்படையான உரையாடல்கள் இடம் பெற்றுள்ளது. சென்சார் போர்டு நீக்க வேண்டும் என்று பரிந்துரைத்த காட்சிகளை நீக்க வேண்டாம். ஆனால் சில காட்சிகளை மாற்றியமைக்க வேண்டும். காட்சிகள், வசனங்களை மாற்றியமைத்து 2 வாரங்களில் சென்சார் போர்டுக்கு மீண்டும் விண்ணப்பிக்க வேண்டும். சென்சார் போர்டு 2 வாரங்களில் பரிசீலித்து உரிய சான்றிதழை வழங்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.