டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் | பிளாஷ்பேக் : 3 மொழிகளில் படமான ஸ்ரீதரின் முதல் கதை | காஜல் அகர்வாலுக்கு என்னாச்சு... | கென்யா ட்ரிப்பில் மொபைல் போனை பறிகொடுத்த பிரயாகா மார்ட்டின் | மாதவனை பழிக்குப்பழி வாங்கி விட்டேன் : அஜய் தேவ்கன் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தீபாவளி ரிலீஸாக வெளியாகும் அனுபமா பரமேஸ்வரனின் இரண்டு படங்கள் | கமல், அஜித் பட அப்டேட்: தீபாவளி பரிசாக வருமா? |
மும்பை : ஐ.நா., சபையின், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு அமைப்பின் பிரதிநிதியாக, உலக அழகி பட்டம் பெற்ற, இந்தியாவைச் சேர்ந்த, நடிகை மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபை, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ஆரஞ்ச் தி வோர்ல்டு என்ற, சர்வதேச அமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் பிரதிநிதியாக, 2017ல் உலக அழகி பட்டம் வென்றவரும், நடிகையுமான மனுஷி ஷில்லார், 23, நியமிக்கப்பட்டு உள்ளார்.
இது குறித்து, மனுஷி கூறியதாவது: உலகம் முழுதும், அனைத்து வயது பெண்களும் பல்வேறு வடிவங்களில் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஒரு பெண்ணாக, என்னால் அந்த வேதனையை உணர முடிகிறது. கடந்த ஆண்டு, கொரோனா வைரஸ் பரவலால் ஊரடங்கு அமலானதை தொடர்ந்து, பெண்களுக்கு எதிரான வன்முறை உச்சத்தை எட்டியுள்ளது. பெண்களுக்கு பாதுகாப்பான உலகை கட்டி எழுப்பும் முயற்சிகளில், நாம் தீவிரமாக செயல்பட வேண்டும். அவர்களுக்காக உரத்த குரல் எழுப்ப வேண்டும். இதற்கு பெண்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர்களின் முன்னேற்றத்திற்கான அதிகாரத்தை அளிக்க வேண்டும் என்றார்.
மனுஷி, பிரித்விராஜ் என்ற ஹிந்தி படத்தில், அக் ஷய் குமாருடன் நடித்து வருகிறார்.