படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வருபவர்.. 27.7 மில்லியன் பேர் டுவிட்டரிலும், 52.5 மில்லியன் பேர் இன்ஸ்டாகிராமிலும் அவரை பின் தொடர்கின்றனர். இந்தநிலையில் தற்போது தனது டுவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இதுவரை தான் பதிவிட்டு வந்த புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை அனைத்தையும் அதிரடியாக நீக்கியுள்ளார் தீபிகா படுகோனே.
முதலில் தீபிகாவின் சோஷியல் மீடியா கணக்குகளை யாரோ ஹேக் செய்துவிட்டனரோ என்றுதான் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் ஆடியோ குறிப்பு ஒன்றை பதிவிட்டுள்ள தீபிகா படுகோனே, தானேதான் அவற்றை அழித்துள்ளார் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள ஆடியோ குறிப்பில், “எல்லோருக்கும் வணக்கம்.. என்னுடைய எண்ணங்களையும் உணர்வுகளையும் பதிவு செய்துள்ள என்னுடைய ஆடியோ டைரிக்கு உங்களை வரவேற்கிறேன். என்னுடைய இந்த செயலை நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்வீர்கள் என நம்புகிறேன்.. 2020ஆம் வருடம் அனைவருக்கும் நிலையில்லாத வருடமாக இருந்தாலும் .என்னை பொறுத்தவரை நன்றி மிகுந்ததாகவும் எனது இருப்பை வெளிப்படுத்த உதவுவதாகவும் அமைந்தது” என கூறியுள்ளார். ஆனாலும் தனது மொத்த பதிவுகளையும் நீக்கியதற்கான காரணத்தை அவர் குறிப்பிடவில்லை.