இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
இந்தி மற்றும் மராட்டிய மொழி சினிமாவின் காமெடி நடிகர் முனாவர் பரூக். அவ்வப்போது மேடை நாடகங்களிலும் நடித்து வருகிறவர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கபே ஒன்றில் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில், முனாவர் பரூக்கின் ஸ்டாண்ட் அப் காமெடி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதில், முனாவர் பரூக் இந்து கடவுள்களையும், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் இழிவுபடுத்தி பேசினார்.
இது தொடர்பாக பாஜ எம்எல்ஏ மாலினி லட்சுமணன் என்பவரின் மகன் ஏகலைவா சிங் கவுர் காவல் நிலையத்தில் முனாவர் தொடர்ந்து தனது நிகழ்ச்சிகளில் இந்து கடவுள்களையும், அமித்ஷாவையும் இழிவுபடுத்துவதாகவும் புகார் செய்தார். அதற்கான வீடியோ ஆதாரங்களையும் தாக்கல் செய்தார். இதை தொடர்ந்து முனாவர் ரூக்கும் அவரது குழுவை சேர்ந்த 5 பேர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பின்னர் கைது செய்யப்பட்ட அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.