ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? | அல்லு அர்ஜுன் - அட்லி படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம் | படப்பிடிப்பை முடித்த விஷ்ணு விஷால், ராம்குமார் | வினோத் தயாரிப்பில் பிக்பாஸ் ராஜூ? | வெற்றியைப் பதிவு செய்வாரா 'படை தலைவன்' ? | பிளாஷ்பேக்: “எதிர் நீச்சல்” செய்து வென்று காட்டிய இயக்குநர் கே பாலசந்தர் |
சூர்யா தயாரித்து, நடித்த படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இது போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இளைஞனின் நிஜகதை. இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தாலும் வழக்குகளும் விடாது துரத்துகிறது. ஒவ்வொரு வழக்கில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள், அதில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவரும் ஒருவர். அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற செப்டம்பர் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.