தனுஷ், மோகன்லால் கூட்டணியை உருவாக்க முயற்சி | மீண்டும் தயாரிப்பில் களமிறங்கும் ஹிருத்திக் ரோஷன் | முகேன் ராவ் நடிக்கும் புதிய படம் நிறம் | காந்தி கண்ணாடி முதல் மதராஸி வரை.... ஒவ்வொன்னுன் செம வொர்த்.... இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | மும்பையில் புதிய வீடு வாங்கி குடியேறிய சமந்தா | அப்பா தம்பி ராமயைா கதை எழுத, மகன் உமாபதி இயக்கும் படம் | செல்லப்பிராணி, குழந்தை அன்பை விவரிக்கும் ‛கிகி கொகொ' | தீபாவளிக்கு 'டியூட்' மட்டும் தானா? : பிரதீப் ரங்கநாதன் தகவல் | மேக்கப் இல்லாமலும் இவ்வளவு அழகா ராஷ்மிகா | மந்திரி பதவி கேட்கும் நடிகர் பாலகிருஷ்ணா ? |
சூர்யா தயாரித்து, நடித்த படம் ஜெய்பீம். த.செ.ஞானவேல் இயக்கி இருந்தார். இது போலீஸ் காவலில் கொல்லப்பட்ட ஒரு இருளர் இளைஞனின் நிஜகதை. இந்த படம் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று விருதுகளை குவித்தாலும் வழக்குகளும் விடாது துரத்துகிறது. ஒவ்வொரு வழக்கில் இருந்து மீண்டு வந்தாலும் அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்டு வருகிறது.
தற்போது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் உண்மையில் வாழ்ந்தவர்கள், அதில் ராஜாக்கண்ணுவின் சகோதரி மகனுமான கொளஞ்சியப்பன் என்பவரும் ஒருவர். அவர் தொடர்பான காட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தது.
இந்த நிலையில் கொளஞ்சியப்பன் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். தனக்கும், தனது குடும்பத்திற்கும் நடந்த உண்மைச் சம்பவங்களை திரைப்படத்தில் காட்சிப்படுத்தியதற்காக தங்களுக்கும் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று அவர் தாக்கல் செய்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் சூர்யா மற்றும் இயக்குனர் த.செ.ஞானவேல் ஆகியோர் மீது காப்புரிமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அதன் அறிக்கையை வருகிற செப்டம்பர் 26ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று சாஸ்திரி நகர் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது.