விஜய்யை தொடர்ந்து தனுஷை இயக்கும் வினோத் | ஏ.ஆர்.ரஹ்மானின் இசை நிகழ்ச்சியை காண முடியாமல் போனவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்க உத்தரவு | துருவ நட்சத்திரம் : சிம்ரன் அளித்த உறுதி | குபேரா படத்தின் ரன்னிங் டைம் எவ்வளவு | பிளாஷ்பேக்: விஜயகாந்த் நடிக்க மறுத்து, மம்மூட்டி நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் | தர்மேந்திரா உடன் மீண்டும் இணைந்து நடிக்கும் அர்பாஸ் கான் | வெற்றிக்காக ஏங்கும் நயன், விக்கி | 25வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் 'சிட்டிசன்' | ரவி மோகன் படத்தலைப்பு ‛ப்ரோ கோட்' : நான்கு ஹீரோயின்கள் | விஜய் மில்டன் படத்தில் சுனில் |
சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடித்து கடந்த வருடம் வெளிவந்து வெற்றி பெற்ற தெலுங்குப் படம் 'புஷ்பா'. தமிழிலும் டப்பிங் ஆகி வெளியாகி இங்கு 25 கோடிக்கும் மேல் வசூலித்து லாபத்தைக் கொடுத்த படமாக அமைந்தது.
இரண்டாம் பாகத்தை இன்னும் பிரம்மாண்டமாக சிறப்பாக உருவாக்க வேண்டும் என கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக திரைக்கதையை எழுதி வந்தனர். அடுத்த மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என்று சொல்லப்பட்ட நிலையில் இன்று(ஆக., 22) இப்படத்தின் பூஜை நடைபெறும் என நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்கள்.
ஐதராபாத்தில் இப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் தயாரிப்பாளர்கள் இயக்குனர் சுகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். படத்தின் நாயகன் அல்லு அர்ஜுன் அமெரிக்காவில் இருப்பதாலும், கதாநாயகி ராஷ்மிகா வேறு படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாலும் கலந்து கொள்ளவில்லை. இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜுன், பகத் பாசில் இடையிலான மோதல் கதையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'இரண்டாம் பாகத்திற்கு 'புஷ்பா - த ரூல்' என பெயர் வைத்துள்ளார்கள்.