ஜானி டெப்புக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது | ஆஸ்கர் விருது: ஆறு தமிழ் படங்கள் உட்பட 29 இந்திய படங்கள் பரிந்துரை | 'புஷ்பா 2' ரிலீஸ், மீண்டும் உறுதி செய்த படக்குழு | பிளாஷ்பேக் : 10 வேடங்களில் நடித்த முதல் நடிகர் | ஜூனியர் என்டிஆர் ரசிகர்கள் செய்த ரகளை! தேவரா படவிழா ரத்து!! | யாராக இருந்தாலும் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்! - இயக்குனர் ஷங்கர் எச்சரிக்கை | சுயமரியாதை முக்கியம்... என்னிடம் மன்னிப்பு கேளுங்க : விஜய் படம் குறித்த வதந்திக்கு சிம்ரன் கடும் பதிலடி | எல்லை மீறும் இளசுகள்: தீயாய் பரவும் திரிஷா 'ஏஐ' வீடியோ | பிளாஷ்பேக் : குழந்தையாக வந்தார், சிறுமியாக மறைந்தார் : மின்னி மறைந்த ஷோபா வாழ்க்கை | கதையின் நாயகனாக விநாயகன் ; வில்லனாக மம்முட்டி |
காதல் செய்த சமயங்களில் சுற்றுலா சென்ற புகைப்படங்களைப் பதிவிட்டு பல இளைஞர்களை ஏங்க வைத்தது நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி. சரி, திருமணமான பின்பாவது அப்படி புகைப்படங்களைப் பதிவிடாமல் நிறுத்துவார்கள் என்று எதிர்பார்த்தால் இப்போதும் தொடர்கிறார்கள். தற்போது ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ள நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஜோடி இடைவிடாமல் புகைப்படங்களைப் பதிவிட்டு வருகிறார்கள்.
இயக்குனரும், சில காதல் பாடல்களை எழுதியவருமான விக்னேஷ் சிவனின் நயன்தாரா பற்றிய கவிதை வரிகள் இப்போதும் தொடர்வதில் ஆச்சரியமில்லை தான். ஸ்பெயின் நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றான பழமையான வாலேன்சியா நகரில் தற்காலக் கட்டிடங்கள் முன்பாக நயன்தாரா எடுத்த சில புகைப்படங்களை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார். அவற்றோடு, “நீ என் உலக அழகியே, உன்னைப் போல் ஒருத்தி இல்லையே… என் உலக அழகியும், இவ்வுலகின் அழகும், இந்தியாவிலிருந்து வந்துள்ள அழகானப் பெண் நயன்தாரா..இதுவரை சென்ற இடங்களில் மிகச் சிறந்த இடம்,” எனப் பதிவிட்டுள்ளார்.