என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து தனுஷ் நடித்த 'மாரி, தங்க மகன்' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த மூன்று படங்களில் '3, மாரி' ஆகிய படங்களின் பாடல்கள்தான் சூப்பர் ஹிட்டாகின. இருந்தாலும் 'டிஎன்எ' காம்போ என ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
இருப்பினும் கடந்த ஏழு வருடங்களாக தனுஷ், அனிருத் கூட்டணியில் எந்தப் படமும் வரவில்லை. இக் கூட்டணியின் நான்காவது படமாக நேற்று வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு அனிருத் 'டிஎன்ஏ' என்பதை மட்டும் பதிவு செய்து தனுஷை டேக் செய்து, இருவரும் கட்டிப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதை ரி-டுவீட் செய்து தனுஷும் ஹாட்டின் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.