இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் | நள்ளிரவில் கேரள போலீசாரிடம் ஹோட்டலில் இருந்து குதித்து தப்பிய வில்லன் நடிகர் | 'கனிமா'வைத் தொடர்ந்து 'ஜிங்குச்சா' : மீண்டும் ஒரு திருமணப் பாடல் | 'பெத்தி' படத்தில் இணைகிறாரா காஜல் அகர்வால்? | 'கூலி' படத்தில் நடித்துள்ள 'குட் பேட் அக்லி' பிரபலம்! | ரெட்ரோ படத்தின் தணிக்கை மற்றும் நீளம் குறித்து தகவல் இதோ! | ஆன் ஸ்க்ரீன் என்னோட குரு கமல்ஹாசன் - சிலம்பரசன் பேச்சு | பொன்னியின் செல்வன் : தயாரிக்க மறுத்த கமல்ஹாசன் | தனுசுடன் 'குபேரா' புரமோஷன் நிகழ்ச்சிகளில் பங்கேற்க தயாராகி வரும் ராஷ்மிகா மந்தனா! |
தமிழ்த் திரையுலகில் இன்றைய இளம் ரசிகர்களைக் கவர்ந்த இசையமைப்பாளராக உள்ளவர் அனிருத். தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கத்தில் தனுஷ் நாயகனாக நடித்த '3' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். தொடர்ந்து தனுஷ் நடித்த 'மாரி, தங்க மகன்' ஆகிய படங்களுக்கு அனிருத் இசையமைத்திருந்தார். இந்த மூன்று படங்களில் '3, மாரி' ஆகிய படங்களின் பாடல்கள்தான் சூப்பர் ஹிட்டாகின. இருந்தாலும் 'டிஎன்எ' காம்போ என ரசிகர்கள் பேச ஆரம்பித்தனர்.
இருப்பினும் கடந்த ஏழு வருடங்களாக தனுஷ், அனிருத் கூட்டணியில் எந்தப் படமும் வரவில்லை. இக் கூட்டணியின் நான்காவது படமாக நேற்று வெளியான 'திருச்சிற்றம்பலம்' படம் அமைந்துள்ளது. அனிருத்தின் இசையில் பாடல்கள் பெரிய வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் படத்திற்கு ரசிகர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அதைத் தொடர்ந்து நேற்று இரவு அனிருத் 'டிஎன்ஏ' என்பதை மட்டும் பதிவு செய்து தனுஷை டேக் செய்து, இருவரும் கட்டிப் பிடித்திருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதை ரி-டுவீட் செய்து தனுஷும் ஹாட்டின் எமோஜியைப் பதிவிட்டுள்ளார்.