புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பு, சங்கீதா உள்பட பலர் நடித்து வரும் படம் வாரிசு. தமிழ், தெலுங்கில் உருவாகி வரும் இந்த படம் வருகிற பொங்கல் தினத்தில் திரைக்கு வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
வாரிசு படப்பிடிப்பு முழு செக்யூரிட்டியுடன் நடத்தப்பட்டு வருகிறது. என்றாலும் நேற்று வாரிசு படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரல் ஆனது. இதன் காரணமாக படக்குழு பலத்த அதிர்ச்சி அடைந்துள்ளது.
இந்த நிலையில் வாரிசு படத்தின் இயக்குனர், படப்பிடிப்பு தளத்திற்கு வரும் யாரும் இனிமேல் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என்று ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்திருக்கிறார். வாரிசு படம் திரைக்கு வருவது வரை எந்த ஒரு புகைப்படங்களும் வீடியோக்களும் வெளியில் கசியக் கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.