100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு | இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? |
திருமணம் முடிந்த கையோடு ஹனிமூன் சென்ற நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக ஹனிமூனுக்காக ஸ்பெயின் நாட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்த நிலையில் நேற்று நம் நாட்டின் சுதந்திர தினத்தை ஒட்டி அவர்கள் இருவரும் ஸ்பெயின் நாட்டிலேயே இந்திய தேசியக் கொடியை ஏந்தியபடி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி உள்ளார்கள்.
தனது சமூக வலைதளத்தில் தாங்கள் தேசிய கொடியை ஏந்தி நிற்கும் ஒரு வீடியோவை வெளியிட்டு அதன் பின்னணியில் ஏ.ஆர்.ரகுமானின் வந்தே மாதரம் ஆடியோவையும் ஒலிக்க வைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன். மேலும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் 75வது சுதந்திர தின வாழ்த்துகள். இந்த நாளை மகிழ்ச்சியுடனும் பெருமையுடனும் கொண்டாடுவோம். ஒரு இந்திய குடிமகனாக நாம் அனைவரும் ஆசிர்வதிக்கப்பட வேண்டும். உலகிலேயே மிகவும் பாதுகாப்பான சுதந்திரமான ஜனநாயக மற்றும் மகிழ்ச்சியான வீடு என்றால் நம்முடைய இந்திய நாடு தான் என்று அவர் ஒரு பதிவும் போட்டு உள்ளார்.