Advertisement

சிறப்புச்செய்திகள்

பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யின் 67வது படத்தில் இணைந்த கவுதம் மேனன்

16 ஆக, 2022 - 05:16 IST
எழுத்தின் அளவு:
Gautham-Menon-joins-Vijay-in-his-67th-film

2012ம் ஆண்டு விஜய் நடிப்பில் ‛யோஹான் அத்தியாயம்' ஒன்று என்ற படத்தை இயக்க தயாரானார் கவுதம் மேனன். அந்தப் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு படப்பிடிப்பும் தொடங்கப்போவதாக அவர் அறிவித்தார். ஆனபோதிலும் படப்பிடிப்பிற்கு செல்லும் முன்பே படத்தின் மொத்த கதையையும் கவுதம் மேனன் தன்னிடத்தில் சொல்லாததால் அந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார் விஜய். அதன் காரணமாகவே யோஹான் அத்தியாயம் ஒன்று படம் அப்போதைக்கு கைவிடப்பட்டது.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் கமலஹாசன், அஜித் குமார், சூர்யா, சிம்பு என பல முன்னணி நடிகர்களை வைத்து படம் இயக்கி விட்ட கவுதம் மேனன், ரஜினி, விஜய் ஆகிய இருவரையும் வைத்து இதுவரை படம் இயக்கவில்லை. இந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் அவர் இணைந்திருக்கிறார். கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் நடிக்க போகிறார்கள். ஏற்கனவே ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் மற்றும் தமிழ் நடிகர் அர்ஜுன், மலையாள நடிகர் பிருத்திவிராஜ் ஆகியோர் கமிட்டாகி உள்ள நிலையில் தற்போது கவுதம் மேனனும் இன்னொரு வில்லன் வேடத்தில் நடிக்க இப்படத்தில் இணைந்திருக்கிறார். அந்த வகையில் விஜய்யுடன் இயக்குனராக இணைய முடியாத கவுதம் மேனன் இப்போது அவர் படத்தில் வில்லனாக இணைந்திருக்கிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
விடுதலையில் நானே வேறொருவனாக தெரிகிறேன்: சூரி பேச்சுவிடுதலையில் நானே வேறொருவனாக ... ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் கொடியை பறக்க விட்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் ஸ்பெயின் நாட்டில் இந்திய தேசியக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)