காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
'பூவே உனக்காக' சீரியலில் ஹீரோ, ஹீரோயின் மற்றும் பல முக்கிய கதாபாத்திரங்கள் அடிக்கடி ரீப்ளேஸ் செய்யப்பட்டதால் டிஆர்பியில் பெர்பார்மன்ஸ் செய்ய முடியாமல் திணறியது. இதனையடுத்து சமீபத்தில் இந்த தொடர் முடித்து வைக்கப்பட்டது. இந்த சீரியலின் தொடக்கத்தில் கதாநாயகியாக பூவரசி என்ற கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ராதிகா ப்ரீத்தி. கன்னடத்து பைங்கிளியான இவர் இந்த தொடரில் நடித்ததன் மூலம் தமிழக ரசிகர்களையும் கவர்ந்து கனவு கன்னி ஆனார். சீரியலை விட்டு விலகிய பின் சமூக வலைதளத்தில் ஆக்டிவாக புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.
ரசிகர்கள் பலரும் ராதிகா ப்ரீத்தி ஏன் சீரியலை விட்டு விலகினார்? மீண்டும் சீரியலில் நடிப்பாரா? என கேள்விகள் கேட்டு வந்தனர். இதற்கிடையில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடித்த 'நாதிரு தின்னா' திரைப்படத்தின் ரிலீஸ் புரோமோஷன்களும் கலைக்கட்டியதால் அவர் மீண்டும் சீரியலில் நடிக்க வரமாட்டார் என ரசிகர்கள் கவலையடைந்தனர். ஆனால், ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ராதிகா ப்ரீத்தி மீண்டும் சின்னத்திரைக்கு வரவுள்ளார். ஒரு பிரபல தொலைக்காட்சியில் புதிதாக தயாரிக்கப்பட்டு வரும் தொடரில் ராதிகா ப்ரீத்தி ஹீரோயினாக நடிக்க உள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. இதனால், ராதிகா ப்ரீத்தியின் ரசிகர்கள் பலரும், அவரது ரீ- என்ட்ரியை மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்.