மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன், ராஷ்மிகா, பஹத்பாசில் நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழ், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வரவேற்பையும், வெற்றியையும் பெற்ற படம் ‛புஷ்பா'. இதன் இரண்டாம் பாகம் அதே கூட்டணியில் தயாராகிறது. முதல்பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாய் படத்தை எடுக்க திரைக்கதையையும் வலுவாக்கி வருகின்றனர். அதோடு இன்னும் சில முக்கிய நடிகர்களையும் நடிக்க வைக்க பேசி வருகின்றனர்.
அந்தவகையில் தெலுங்கில் உப்பெனா படத்தில் வில்லனாக நடித்த விஜய்சேதுபதி புஷ்பா படத்தின் முதல்பாகத்தில் நடிப்பதாக இருந்தது. பின்னர் அவர் விலகினார். தற்போது இரண்டாம் பாகத்தில் அவர் வில்லனாக நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி உள்ளது. இந்நிலையில் பருத்திவீரன் பிரியாமணி இந்த படத்தில் கமிட்டாகி இருக்கிறாராம். இப்படத்தில் அவர் ஒரு வலுவான ரோலில் கிட்டத்தட்ட வில்லி வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இவர் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்கிறாராம்.
தற்போது ஹிந்தியில் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிக்கும் ஜவான் படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்து வரும் பிரியாமணி, தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என தற்போது அரை டஜன் படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.