குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' | குழந்தைகளின் உளவியலை பேசும் 'நாங்கள்' | சிங்கப்பூர் பள்ளியில் படிக்கும் பவன் கல்யாண் மகன் தீ விபத்தில் சிக்கி மருத்துவமனையில் அனுமதி | பிளாஷ்பேக்: கடைசி வரை ஹீரோயின் ஆக முடியாத பிருந்தா பரேக் | பிளாஷ்பேக்: வண்ணத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட சக்ர தாரி |
ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடித்த யானை படம் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில் அடுத்தபடியாக அறிவழகன் இயக்கத்தில் அவர் நடித்துள்ள பார்டர் படமும் ரிலீஸிற்கு தயாராகி விட்டது. இந்த படத்தில் அரவிந்த் சந்திரசேகர் என்ற அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் அருண் விஜய். அவருக்கு ஜோடியாக ரெஜினா நடிக்க, சாம் சி.எஸ் இசை அமைத்திருக்கிறார். மில்டரி பின்னணி கதையில் உருவாகியுள்ள இப்படத்தின் இறுதிகட்டப் பணிகள் முடிந்து திரைக்கு வர தயாராகி உள்ள நிலையில் ஆகஸ்ட் 31-ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முன்பு அறிவழகன் இயக்கத்தில் குற்றம்- 23 என்ற படத்தில் அருண்விஜய் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.