பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தெலுங்கு நடிகர் நாகசைதன்யாவும், சமந்தாவும் நான்கு ஆண்டு திருமண வாழ்க்கைக்கு பிறகு விவாகரத்து செய்யப்போவதாக அறிவித்தார்கள். அதையடுத்து அதற்கான காரணத்தை அவர்கள் தெரிவிக்காத நிலையில், சமீபத்தில் ‛காபி வித் கரண்' சீசன் 7வது நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டார் சமந்தா. திருமண வாழ்க்கை குறித்து அதிகமாக வெளிப்படுத்தவில்லை என்றாலும், அந்த குழப்பமான காலகட்டத்தில் இருந்து தான் வெளியே வந்து விட்டதாக கூறியிருந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு டாக் ஷோவில் கலந்து கொண்ட நாகசைதன்யா, அமீர் கானுடன் இணைந்து தான் நடித்துள்ள லால்சிங் சத்தா படம் குறித்து பல தகவல்களை வெளியிட்டார். அப்போது அவரிடத்தில் சமந்தா குறித்து கேள்வி கேட்கப்பட்டபோது, ‛‛நாங்கள் இருவரும் என்ன சொல்ல விரும்புகிறோமோ அது குறித்து இருவருமே அறிக்கை வெளியிட்டோம். இப்போது இருவருமே அவரவர் பாதையில் சென்று கொண்டிருக்கிறோம். அதனால் மீண்டும் பழைய வாழ்க்கை குறித்து பேசி தேவையில்லாத விமர்சனங்களை சந்திக்க விரும்பவில்லை. அதோடு எங்களது கடந்த கால வாழ்க்கை குறித்து அதிகப்படியான விஷயங்களை இந்த உலகிற்கு அறிவிக்க வேண்டிய அவசியமும் இல்லை'' என்று சமந்தா குறித்த கேள்விக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் நாகசைதன்யா .