ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
இந்தியத் திரையுலகத்தின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவரான ராஜமவுலி 'பாகுபலி, ஆர்ஆர்ஆர்' ஆகிய படங்களைக் கொடுத்து உலகம் முழுவதும் உள்ள பல திரைப்படக் கலைஞர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.
'அவஞ்சர்ஸ் என்ட்கேம்' மற்றும் சமீபத்தில் வெளிவந்த 'த கிரே மேன்' உள்ளிட்ட படங்களை இயக்கிய ரூசோ பிரதர்ஸ் சமீபத்தில் மும்பை வந்திருந்தனர். அப்போது அவர்களை ராஜமவுலி சந்தித்துப் பேசியுள்ளார்.
அது குறித்து ரூசோ பிரதர்ஸ், “சிறப்பு வாய்ந்த ராஜமவுலியை சந்தித்தது பெருமை” என்று தெரிவித்திருந்தார்கள். அதற்கு நன்றி தெரிவித்து ராஜமவுலி, “மரியாதையும், மகிழ்ச்சியும் என்னுடையது. உங்களுடனான பேச்சு சிறப்பு வாய்ந்தது. உங்களை சந்தித்து உங்கள் கலையை நானும் சிறிது கற்றுக் கொள்ள ஆவலுடன் காத்திருக்கிறேன்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.