பிளாஷ்பேக் : முதல் ஆக்ஷன் ஹீரோயின் | அவரா? இவரா? வேறு யாருமா? குழப்பத்தில் ரஜினி படம் | கதைநாயகன் ஆன பரோட்டா முருகேசன் | இந்த வார ரீ ரிலீஸில், 'அட்டகாசம், அஞ்சான்' | ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் |

தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. ஒருபக்கம் முன்னணி ஹீரோக்களின் படங்களில் காமெடியனாக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் சில படங்களில் கதையின் நாயகனாகவும் நடித்து வருகிறார் யோகிபாபு. அவர் இருந்தாலே ஒரு பக்கம் படம் வியாபாரம் ஆவதுடன் ரசிகர்களும் அவரது போஸ்டரை பார்த்துவிட்டு நம்பிக்கையுடன் தியேட்டருக்கு வருகிறார்கள். அதேசமயம் இதை தங்களுக்கு சாதகமாக எடுத்துக் கொண்டு பல படக்குழுவினர் யோகிபாபு இரண்டு காட்சிகளில் நடித்திருந்தாலும் கூட அவரை முன்னிலைப்படுத்தியே தங்களது படங்களை விளம்பரப்படுத்துகின்றனர்.
அந்தவகையில் தற்போது யோகிபாபு நடித்துள்ள படம் தாதா. இந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. அதில் யோகிபாபு துப்பாக்கியை வைத்தபடி நிற்பது போன்று டிசைன் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இந்த படத்தின் கதாநாயகன் என்னவோ நிதின் சத்யா தான்.
இந்த போஸ்டர் வெளியானதும் யோகிபாபு பதிவிட்டது : “இந்த படத்தில் நண்பர் நிதின் சத்யா தான் ஹீரோவாக நடித்துள்ளார். நான் நான்கு காட்சிகளில் மட்டுமே நடித்துள்ளேன். தயவு செய்து இதைப்போன்று விளம்பரம் செய்யாதீர்கள்.. நன்றி” என பதிவிட்டு படக்குழுவினருக்கு எச்சரிக்கை செய்துள்ளார்.
யோகிபாபுவின் இந்த பெருந்தன்மை குறித்து படத்தின் நாயகன் நிதின் சத்யா கூறும்போது, “ஒரு நண்பனை விட்டுகுடுக்காம, ரசிகர்களையும் விட்டுகுடுக்காம.. அந்த மனசு தான் யோகிபாபு” என்று கூறியுள்ளார்
இதற்கு முன்னதாகவும் இதே போன்று ஒரு படத்தில் தான் வெறும் இரண்டு காட்சிகளில் மட்டுமே நடித்த நிலையில் தன்னை கதாநாயகன் போன்று சித்தரித்து விளம்பரம் செய்ததை கண்டித்து யோகிபாபு அறிக்கை வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.