ஆகஸ்ட் 1ல் 150 படங்களை கடக்கப் போகும் 2025 | 24 மணிநேரத்திற்குள் 50 லட்சம் பார்வைகளை கடந்த ‛என்ன சுகம்' பாடல் | காப்புரிமை விவகாரம் : இளையராஜா மனு தள்ளுபடி | கோவிலில் தீ மிதித்த புகழ் | 'தலைவன் தலைவி' முதல்வார இறுதியில் 25 கோடி வசூல் | அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் |
தமிழில் ரன், பையா, சண்டக்கோழி என ஆக்சன் படங்களை மாஸாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. தற்போது தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ள லிங்குசாமி, தெலுங்கு இளம் முன்னணி ஹீரோவான ராம் கதாநாயகனாக நடித்துள்ள வாரியர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கீரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.
அதேசமயம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதாவது அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு லிங்குசாமியின் பயணத்தில் ஒரு தொய்வு ஏற்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இருமொழி படம் இயக்குவதாக லிங்குசாமி அறிவித்து அதன் துவக்க விழா பூஜை கூட சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு வருடங்கள் பல கடந்தும் அந்த படம் என்ன ஆயிற்று என்கிற தகவல் தெரியவில்லை.
இந்த நிலையில் வாரியர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லிங்குசாமியிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, “அல்லு அர்ஜுன் படம் கைவிடப்படவில்லை. அதே சமயம் அந்த படத்திற்கான சிறப்பான கதை இன்னும் முடிவாகவில்லை.. அதனால் தான் அந்தப்படம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் படத்தை ஒருநாள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார் லிங்குசாமி.