துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடிக்க 3 கோடி சம்பளம் வாங்கிய பூஜா ஹெக்டே! | புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் |
தமிழில் ரன், பையா, சண்டக்கோழி என ஆக்சன் படங்களை மாஸாகவும் ஸ்டைலிஷ் ஆகவும் கொடுத்தவர் இயக்குனர் லிங்குசாமி. தற்போது தெலுங்கில் என்ட்ரி கொடுத்துள்ள லிங்குசாமி, தெலுங்கு இளம் முன்னணி ஹீரோவான ராம் கதாநாயகனாக நடித்துள்ள வாரியர் என்கிற படத்தை இயக்கியுள்ளார். கீரீத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ள இந்த படம் தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளில் வெளியாகி உள்ளது.
அதேசமயம் கடந்த 6 வருடங்களுக்கு முன்பு அதாவது அஞ்சான் படத்தின் தோல்விக்குப் பிறகு லிங்குசாமியின் பயணத்தில் ஒரு தொய்வு ஏற்பட்ட நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தெலுங்கு, தமிழ் என இருமொழி படம் இயக்குவதாக லிங்குசாமி அறிவித்து அதன் துவக்க விழா பூஜை கூட சென்னையில் நடைபெற்றது. ஆனால் அதன் பிறகு வருடங்கள் பல கடந்தும் அந்த படம் என்ன ஆயிற்று என்கிற தகவல் தெரியவில்லை.
இந்த நிலையில் வாரியர் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய லிங்குசாமியிடம் இது பற்றி கேட்கப்பட்டபோது, “அல்லு அர்ஜுன் படம் கைவிடப்படவில்லை. அதே சமயம் அந்த படத்திற்கான சிறப்பான கதை இன்னும் முடிவாகவில்லை.. அதனால் தான் அந்தப்படம் தள்ளிப்போய்க்கொண்டு இருக்கிறது. நிச்சயம் அல்லு அர்ஜுன் படத்தை ஒருநாள் இயக்குவேன்” என்று கூறியுள்ளார் லிங்குசாமி.