புகழ்ச்சியை தலையில் ஏற்றிக் கொள்ள மாட்டேன்! : கல்யாணி பிரியதர்ஷன் | விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்.ஏ.சி.,யை டென்ஷன் ஆக்கிய கேள்வி! | திருமணம் செய்து கொள்ளாமல் இரட்டை குழந்தை பெற்றெடுத்த நடிகை பாவனா ரமண்ணா! | சிம்புவின் ‛அரசன்' படத்தில் இடம் பெறும் மூன்று முன்னணி நடிகைகள்! | அடூர் கோபாலகிருஷ்ணன் படத்தில் நடிக்காததால் தான் மோகன்லால் சூப்பர் ஸ்டார் ஆனார் ; குணச்சித்திர நடிகர் கிண்டல் | துல்கர் சல்மான் கார் பறிமுதல் விவகாரம் ; சுங்கத்துறைக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி | நாகார்ஜுனாவின் 100வது படத்தில் இணையும் நாகசைதன்யா - அகில் | இந்திய ராணுவ தலைமை தளபதி ஜெனரலை சந்தித்த மோகன்லால் | டீசலுக்காக படகு ஓட்டவும் மீன்பிடிக்கவும் பயிற்சி எடுத்த ஹரிஷ் கல்யாண் | காந்தாரா கிராமத்தில் குடியேறுகிறார் ரிஷப் ஷெட்டி |
பிரித்திவிராஜ் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகியுள்ள கடுவா திரைப்படம் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் பற்றி இடம் பெற்ற வசனங்கள் குறித்து மன்னிப்பு கேட்ட பிரித்விராஜ் சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது மீண்டும் அதற்கு வருத்தம் தெரிவித்தார். மேலும் நடிகர்களில் ஆண், பெண் வித்தியாசம் இல்லாமல் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்குவது குறித்து சமீபகாலமாக மலையாள திரை உலகில் பேசப்பட்டு வரும் விஷயம் பற்றி பிரித்விராஜிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த பிரித்விராஜ், தனக்கும் ஆண் - பெண் வித்தியாசம் இல்லாமல் ஊதியம் வழங்குவதில் உடன்பாடுதான் என்றாலும் அதை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாகவும் கூறினார். நான் மணிரத்தினம் இயக்கத்தில் ராவணன் படத்தில் நடித்தபோது தன்னைவிட படத்தின் கதாநாயகி ஐஸ்வர்யா ராய் அதிக சம்பளம் வாங்கினார் என்று குறிப்பிட்ட பிரித்விராஜ், இந்த விஷயத்தில் நடிகர்களுக்கான ஊதியம் அவர்களது ஸ்டார் வேல்யூவை கணக்கில் கொண்டு தான் வழங்கப்படுகிறதே தவிர, அவர்கள் ஆண், பெண் என்ற பாகுபாடு காரணமாக இல்லை என்றும் கூறியுள்ளார்.