சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் ஏஆர் ரஹ்மான். தற்போது தமிழில் அதிகப் படங்களில் இசையமைத்து வருகிறார். அவரது இசையில் அடுத்தடுத்து, “இரவின் நிழல், கோப்ரா, பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு, பத்து தல, அயலான், மாமன்னன்' ஆகிய படங்கள் வெளிவர உள்ளன.
இரு தினங்களுக்கு முன்பு 'கோப்ரா' பட இசை வெளியீட்டு நிகழ்வில் படத்தின் பாடல்களை நேரடி இசை நிகழ்ச்சியாக மேடையில் தனது குழுவினர்களுடன் வழங்கினார். நூற்றுக்கணக்கான ரசிகர்கள் அந்த விழாவை நின்று கொண்டே ரசித்தனர்.
நிகழ்ச்சி முடிந்த பின் விடியற்காலையில் தனது சமூக வலைத்தளங்களில் திடீரென ஒரு புகைப்படத்தை எந்த கேப்ஷனும் இல்லாமல் பதிவிட்டுள்ளார். அதை எதற்காகப் பதிவிட்டார் என்பதும் தெரியவில்லை. தமிழ்த் திரையுலகின் மூத்த இசையமைப்பாளர்களான மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன், ராமமூர்த்தி, இசைஞானி இளையராஜா ஆகியோருடன் ஏஆர் ரஹ்மான் இருக்கும் ஒரு பழைய புகைப்படம் அது. அவர்களது பெயரை மட்டும் குறிப்பிட்டு அந்தப் புகைப்படைத்தைப் பகிர்ந்துள்ளார் ஏஆர் ரஹ்மான்.
தமிழ்த் திரையுலகின் முக்கியமான நான்கு இசை மேதைகள் உள்ள அந்த புகைப்படம் ஒரு பொக்கிஷம் என ரசிகர்கள் பலரும் டவுன்லோடு செய்துள்ளார்கள் என்பது சமூக வலைத்தளங்களில் இருக்கும் பதிவுகளைப் பார்த்தாலே தெரிகிறது.