பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
ஒத்த செருப்பு சைஸ் 7 படத்துக்கு பிறகு பார்த்திபன் ஒரே ஷாட்டில் இயக்கியுள்ள படம் இரவில் நிழல். இந்த படத்திற்கு ஏ. ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிட பார்த்திபன் தயாராகி வரும் நிலையில், தற்போது நவீன் என்டர்பிரைசஸ் என்ற நிறுவனம் ஒரு வழக்கு தொடர்ந்து உள்ளது. அதில், விருது பெரும் நோக்கத்துடன் இரவின் நிழல் என்ற படத்தை அகிரா புரொடக்சன்ஸ் சார்பில் தயாரித்துள்ளார் நடிகர் பார்த்திபன். இந்த படத்தின் படப்பிடிப்புக்கு தேவையான ஒளிப்பதிவு சாதனங்களை குறைந்த வாடகையில் நவீன் என்டர்பிரைசஸ் என்ற எங்கள் நிறுவனத்திடம் எடுத்திருந்தார்.
ஆனால் ஏற்கனவே பேசப்பட்ட வாடகை தொகையில் 25 லட்சத்து 13 ஆயிரத்து 738 ரூபாயை அவர் இன்னும் செட்டில் செய்யவில்லை. அதனால் இரவின் நிழல் படத்தை ஜூலை 15ம் தேதி வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அந்த நிறுவனத்தை சார்ந்த பாஸ்கர் ராவ் என்பவர் வழக்கு தொடர்ந்து உள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ். எஸ். சத்தியமூர்த்தி, இந்த வழக்கு சம்பந்தமாக நடிகர் பார்த்திபன் மற்றும் அவரது நிறுவனத்தின் இயக்குனரான அவரது மகள் கீர்த்தனா ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 12ம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறார்.