தெலுங்கில் அறிமுகமாகும் பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா! | ஓவியாவை அசிங்கமாக விமர்சிக்கும் விஜய் ரசிகர்கள் | ஜெயிலர் -2வில் நடிக்க அழைப்பு வருமா? தமன்னா எதிர்பார்ப்பு | தெலுங்கு புரமோஷனில் கன்னடத்தில் பேசி விமர்சனங்களில் சிக்கிய ரிஷப் ஷெட்டி! | 250 கோடி வசூலைக் கடந்த பவன் கல்யாணின் 'ஓஜி' | அக்டோபர் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகும் வார்-2! | ப்ரீ புக்கிங் - தனுஷின் இட்லி கடை எத்தனை கோடி வசூலித்துள்ளது? | அல்லு அர்ஜுனை ஆட்டுவித்த ஜப்பான் நடன இயக்குனர் | சினிமாவுக்கு மகன் வருவாரா அஜித் சொன்ன பதில் | 2வது படத்திலேயே அம்மாவாக நடிப்பது தவறா? தர்ஷனா கேள்வி |
'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார், லட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு தாம்பூலத்தில் திருநீரை எடுத்து தனது மனைவி ஷாலினியின் நெற்றியில் வைத்து விடுகிறார் அஜித்குமார்.
அதையடுத்து அவர் அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது அவரை தூக்கி விட்டபடி, தன்னருகில் நிற்பவர்களை பார்த்து, ''வீட்ல போய் நான் காலில் விழணும்'' என்று சிரித்தபடியே ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.