இந்த 3 விஷயங்களும் முக்கியமானவை : தீபிகா படுகோனே | உருவக்கேலி விவகாரம் : கயாடு லோஹர் கொடுத்த விளக்கம் | அடி வாங்க தயாரா : குஷ்பு கோபம் | தனுஷின் தேரே இஷ்க் மெயின் டிரைலர் வெளியீடு : வரவேற்பு எப்படி | காந்தா படத்தின் முதல் நாள் வசூல் விவரம் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி படத்திலிருந்து சுந்தர் சி விலகல் ஏன் : கமல் சொன்ன பதில் | ஜப்பானில் வெளியாகும் மலைக்கோட்டை வாலிபன் : ரிலீஸ் தேதி அறிவிப்பு | தேசிய விருதுக்கு படம் அனுப்புவதில் ஏற்பட்ட சிக்கல் : நீதிமன்றத்தை நாடிய பஹத் பாசில் படக்குழு | மம்முட்டிக்கு பிரித்விராஜ் சிபாரிசு, விநாயகனுக்கு மம்முட்டி சிபாரிசு : களம்காவல் சுவாரசியம் | சித்தார்த், ராஷி கண்ணா இணையயும் 'ரெளடி அண்ட் கோ' |

'குட் பேட் அக்லி' படத்தை அடுத்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் தனது 64வது படத்தில் நடிக்கப் போகிறார் அஜித்குமார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. மேலும் கடந்த சில மாதங்களாக கார் பந்தயங்களில் பங்கேற்று வரும் அஜித் குமார், லட்சுமி விரதத்தை முன்னிட்டு சென்னை வந்திருந்தார். அப்போது சாமி தரிசனம் செய்துவிட்டு தாம்பூலத்தில் திருநீரை எடுத்து தனது மனைவி ஷாலினியின் நெற்றியில் வைத்து விடுகிறார் அஜித்குமார்.
அதையடுத்து அவர் அஜித்தின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறுகிறார். அப்போது அவரை தூக்கி விட்டபடி, தன்னருகில் நிற்பவர்களை பார்த்து, ''வீட்ல போய் நான் காலில் விழணும்'' என்று சிரித்தபடியே ஒரு கமெண்ட் கொடுத்துள்ளார் அஜித். இந்த வீடியோவை அவரது ரசிகர்கள் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகிறார்கள்.