பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'விராட பருவம்' படத்தின் பிரமோஷன் பேட்டி ஒன்றை அளிக்கும் போது அவர் சொன்ன சில விஷயங்கள் சர்ச்சை ஆனது.
'காஷ்மீர் பைல்ஸ்' படம் பற்றியும், மாட்டுக்கறியை எடுத்துச்சென்ற இஸ்லாமியரைத் தாக்கிய நிகழ்வுக்கு என்ன வித்தியாசம் என்று சொல்லியிருந்தார். சர்ச்சை எழுந்த பின் அது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதற்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி சாய் பல்லவின் மனுவை ரத்து செய்துள்ளார்.