பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சாய் பல்லவி. தெலுங்கில் அவர் நடித்து வெளிவந்த 'விராட பருவம்' படத்தின் பிரமோஷன் பேட்டி ஒன்றை அளிக்கும் போது அவர் சொன்ன சில விஷயங்கள் சர்ச்சை ஆனது.
'காஷ்மீர் பைல்ஸ்' படம் பற்றியும், மாட்டுக்கறியை எடுத்துச்சென்ற இஸ்லாமியரைத் தாக்கிய நிகழ்வுக்கு என்ன வித்தியாசம் என்று சொல்லியிருந்தார். சர்ச்சை எழுந்த பின் அது குறித்து விளக்கி வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.
இந்நிலையில் சாய் பல்லவி மீது பஜ்ரங் தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் ஐதராபாத் போலீசில் புகார் அளித்திருந்தனர். அதன் அடிப்படையில் சாய் பல்லவிக்கு தெலங்கானா போலீஸ் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியது. அதற்கு எதிராக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் சாய் பல்லவி மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். அதை விசாரித்த நீதிபதி சாய் பல்லவின் மனுவை ரத்து செய்துள்ளார்.