2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
சென்னையில் கோயம்பேடு மேம்பால பணிகள் நடந்தபோது அங்கிருந்த விஜயகாந்தின் திருமண மண்டபத்தின் சிலபகுதி இடிக்கப்பட்டது. முக்கிய லேண்ட் மார்க்காக இருந்த அவரது மண்டபம் தற்போது தேமுதிக அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. தற்போது அதேபோன்று மெட்ரோ ரெயில் பணிகளுக்காக கமல்ஹாசனின் ஆழ்வார்பேட்டை வீட்டில் 170 சதுர அடி நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துவது குறித்து மெட்ரோ நிறுவனம் சார்பில் கமலுக்கு 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
சென்னையில் 61 ஆயிரம் கோடி செலவில் 2ம் கட்ட மெட்ரோ ரெயில் பணிகள் நடந்த வருகிறது. இதில் கலங்கரை விளக்கம் முதல் பூந்தமல்லி வரையிலான பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பாதை ஆழ்வார்பேட்டை வழியாக செல்கிறது. இதற்காக அப்பகுதியில் நிலங்களை கையகப்படுத்தும் பணியில் மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் ஆழ்வார்பேட்டை, டி.டி.கே. சாலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்தமான அலுவலகம் உள்ளது. இது தற்போது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் அலுவலகமாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மெட்ரோ ரயில் பணிக்கு இந்த இடத்தில் இருந்து 8-10 அடி இடத்தை தங்களுக்கு வழங்கும்படி மெட்ரோ ரெயில் நிறுவனம் சார்பில் கமல்ஹாசனுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.