இந்த மாதிரி வெற்றிக்காக 10 ஆண்டுகள் காத்திருந்தேன் : ‛ஆட்டமா தேரோட்டமா' பாடல் குறித்து ரம்யா கிருஷ்ணன் | நிதின் ஜோடியான பூஜா ஹெக்டே | மறுபிரவேசத்துக்கு வலுவான கதாபாத்திரங்களை தேடும் பிரணிதா | ஜனநாயகன் படப்பிடிப்பு தளத்துக்கு திரண்ட ரசிகர்கள் : பாபி தியோல் ஆச்சரிய தகவல் | பொய் செய்தி பரப்பாதீர்கள் : புகழ் வேதனை | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் பிரேமலு நாயகி | மிருணாள் தாக்கூர் உடன் இணைய விரும்பும் சிவகார்த்திகேயன் | நடிகராக அறிமுகமாகும் கங்கை அமரன் | அஜித் 64 படத்தில் மிஷ்கின்? | உண்மை சம்பவங்கள் அடிப்படையில் சிறை : லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட முதல்பார்வை |
சினிமாவில் எதேச்சையாக அறிமுகமாகி, அப்படி அறிமுகமான முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்க்கும் விதமாக நடிக்கும் நடிகர்கள் உருவாவது மிக அபூர்வம். அப்படி பூ படத்தில் இயக்குனர் சசியால் அறிமுகப்படுத்தப்பட்டு மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் பூ ராமு. அதைத்தொடர்ந்து இத்தனை வருடங்களில் வெகுசில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மனதில் நிற்கும்படியான தங்கமீன்கள், சூரரை போற்று என தான் நடித்த படங்களில் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்தவர் பூ ராமு.
அந்த வகையில் அவருக்கு மலையாளம் மற்றும் தமிழ் என இரு மொழிப்படமாக உருவாகியுள்ள நண்பகல் நேரத்து மயக்கம் என்கிற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு தேடி வந்தது. லிஜோ ஜோஸ் பள்ளிசேரி என்பவர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் மம்முட்டி கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தில் மம்முட்டியுடன் படம் முழுவதும் இணைந்து நடிக்கும் முக்கிய கதாபாத்திரத்தில் பூ ராமுவும் நடித்துள்ளார். சமீபத்தில் அவர் உடல்நலக்குறைவால் காலமானது திரையுலகின் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நடிகர் மம்முட்டி பூ ராமு குறித்து தனது சோசியல் மீடியா பக்கத்தில் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். “தமிழ் சினிமாவில் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவராக பூ ராமுவின் மறைவு குறித்து கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். நண்பகல் நேரத்து மயக்கம் படத்தில் அவரும் ஒரு பாகமாக இருந்ததற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார் மம்முட்டி.