படுகவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட ஜெனிபர் | ஜுனியர் என்டிஆருக்கு வாழ்த்து சொன்ன பவன் கல்யாண் | தெலுங்கு பட ஷூட்டிங்கில் ரச்சிதா மகாலெட்சுமி | 'சத்யா' காட்சியைப் பகிர்ந்து கவியூர் பொன்னம்மாவுக்கு கமல்ஹாசன் இரங்கல் | சுதா சந்திரன் பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் குழுவினர் | சீக்கிரமே அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிடுவேன் - ராஜலெட்சுமி பேட்டி | 160 படங்களைக் கடந்த 2024 ரிலீஸ், 6 படங்கள் மட்டுமே 100 கோடி வசூல் | வித்தியாசமா கூவுறாங்க! மணிமேகலை வெளியிட்ட நறுக் வீடியோ | சீரியலிலும் அட்ஜெஸ்ட்மென்ட் இருக்கு - நிமிஷிகா பளீச் பேட்டி | சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? |
எந்த கதாபாத்திரம் என்றாலும் அதுவாகவே மாறிப்போய் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் மிகச்சில நடிகைகளின் ரேவதியும் ஒருவர். அதனால் தான் இந்த முப்பது வருடத்திற்கு மேலான அவரது திரையுலக பயணத்தில் மூன்று முறை தேசிய விருது பெற்றுள்ளார். அதேசமயம் நடிக்க வந்த காலத்திலிருந்து தற்போது வரை கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது அவருக்கு எட்டாக்கனியாகவே இருந்து வந்தது.. இந்த நிலையில் இந்த வருடம் அறிவிக்கப்பட்ட கேரளா அரசு விருது பட்டியலில் பூதக்காலம் என்கிற படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகைக்கான விருது ரேவதிக்கு அறிவிக்கப்பட்டது.
ஹாரர் திரில்லராக உருவாகியிருந்த இந்தப்படத்தில் கணவன் இல்லாத நிலையில் தனது மகனை வளர்க்க தனியாளாக போராடும் சராசரிப்பெண் கதாபாத்திரத்தில் ரேவதி நடித்துள்ளார். இந்த நிலையில் தங்களது சக நடிகையான ரேவதி முதன்முறையாக கேரள அரசின் சிறந்த நடிகைக்கான விருது பெற்றுள்ளதை அவரது தோழிகளாக எண்பதுகளில் முன்னணி நட்சத்திரங்களாக வலம் வந்த குஷ்பு, சுகாசினி, லிசி, அம்பிகா ஆகியோர் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.