விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி | சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு |
தமிழ்த் திரையுலகின் நம்பர் 1 நடிகையான நயன்தாராவுக்குக் கடந்த வாரம் சென்னையில் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்குப் பிறகும் நயன்தாரா சினிமாவில் நடிக்கப் போகிறார். ஆனாலும், அவர் புது கண்டிஷன்களைப் போட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதைப் பெரும்பாலும் தெலுங்கு ஊடகங்கள்தான் குறிப்பிட்டு எழுதியுள்ளன.
திருமணத்திற்குப் பிறகு நயன்தாரா இன்னும் எந்த ஒரு புதிய படத்திலும் நடிக்க ஒப்பந்தமாகவில்லை. அதற்குள் எப்படி, இப்படி ஒரு புதிய நிபந்தனை போட்டுள்ளார் என்று எழுதுகிறார்கள் எனத் தெரியவில்லை என தமிழ்த் திரையுலகத்தில் தெரிவிக்கிறார்கள்.
கதாநாயகர்களுடன் நெருக்கமாக நடிக்க மாட்டேன், தொடர்ச்சியாக படங்களில் நடிக்க கால்ஷீட் தர மாட்டேன் ஆகியவைதான் நயன்தாரா விதித்துள்ள புதிய நிபந்தனைகள் என்கிறார்கள். நயன்தாரா தற்போது ஷாரூக்கானுடன் 'ஜவான்' என்ற ஹிந்திப் படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் இன்னும் எடுக்க வேண்டியுள்ளது. ஹிந்திப் படங்களில் காதல் காட்சிகள் பொதுவாகவே நெருக்கமாகத்தான் இருக்கும். அப்படியிருக்க திருமணத்திற்குப் பிறகு அப்படி நடிக்க மாட்டேன் என நயன்தாரா எப்படி சொல்லியிருப்பார் என்றும் திரையுலகில் கேள்வி எழுப்புகிறார்கள்.