அமெரிக்காவில் முன்னதாகவே திரையிடப்படும் 'கூலி' | ஜாய் கிறிஸில்டா பதிவை இதுவரை 'ஷேர்' செய்யாத மாதம்பட்டி ரங்கராஜ் | 30 ஆயிரம் கோடி சொத்துக்களில் பங்கு கேட்கிறாரா கரிஷ்மா கபூர்? | பிறமொழி சினிமா: 'கிங்டம்' படத்தில் இலங்கை கதை | சோலோ ஹீரோயினாக நடிக்கும் தன்யா ரவிச்சந்திரன் | 3டியில் வெளியாகும் பான் இந்தியா சூப்பர் ஹீரோ படம் | பிளாஷ்பேக்: முதல் 'பார்ட் 2' படம் | பிளாஷ்பேக்: தாமதத்தால் ஏற்பட்ட 4 பெரும் இழப்புகள் | நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளியாகும் 'அடங்காதே' | ஹரிஹர வீரமல்லு : காட்சிகள் குறைப்பு |
நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர், இசை அமைப்பாளர், பாடகர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர் டி.ராஜேந்தர். அவருக்கு கடந்த சில வாரங்களுக்கு முன்பு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமானார். என்றாலும் அவருக்கு வயிற்று பகுதியில் ரத்த கசிவு ஏற்பட்டது. இதை தொடர்ந்து அவருக்கு வெளிநாட்டில் சிகிச்சை அளிக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர். முதலில் சிங்கப்பூர் அழைத்துச் செல்ல முடிவு செய்திருந்தனர். இப்போது அந்த திட்டத்தை மாற்றி அமெரிக்கா அழைத்துச் செல்ல முடிவு செய்தனர்.
அதன்படி இன்று இரவு அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்கிறார்கள். அவருடன் மகன்கள் சிம்பு, குறளரசன், மகள் இலக்கியா, மனைவி உஷா ஆகியோரும் உடன் செல்கிறார்கள். அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனையில் டி.ராஜேந்தர் அனுமதிக்கப்படுவதாகவும், இரண்டு மாதங்கள் வரை அங்கேயே தங்கி இருந்து அவர் சிகிச்சை பெறுவார் என்றும் குடும்ப வட்டார தகவல்கள் தெரிவிக்கிறது.