சூர்யாவின் ரெட்ரோ சிங்கிள் பாடல் வெளியானது! | நன்றி மாமே - பிரபு, ஆதிக்குடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் திரிஷா வெளியிட்ட பதிவு! | கமலின் 237வது படம்! புதிய அப்டேட் கொடுத்த ராஜ்கமல் பிலிம்ஸ்!! | அஜித்துக்காக ஐ அம் வெயிட்டிங்! - வெங்கட் பிரபு சொன்ன தகவல் | அடுத்த நட்சத்திர காதல் கிசுகிசு - துருவ் விக்ரம், அனுபமா பரமேஸ்வரன் | குடும்பத்தாருடன் ஹைதராபாத் திரும்பிய பவன் கல்யாண் | விஷ்வம்பரா - 70 வயதிலும் நடனத்தில் அசத்தும் சிரஞ்சீவி | ‛‛என்னிடம் நானே மன்னிப்பு கேட்க வேண்டும்'': தவறில் இருந்து பாடம் கற்ற சமந்தா | ‛யார், ஜமீன் கோட்டை' நடிகர் ஜி.சேகரன் காலமானார் | சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க தணிக்கை வாரியம் உத்தரவு: ‛பூலே' படத்துக்கு ரிலீஸ் சிக்கல் |
தெலுங்கு இயக்குனர் அஜய் ஆண்ட்ரூஸ் இயக்கி வரும் படம் மதராஸி கேங். இதில் அத்யாயன் சுமன் கேங்ஸ்டராக நடிக்கிறார். அனன்யா ராஜ் ஹீரோயின். அஷ்மித் படேல் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.
படத்தில் நடிப்பது குறித்து அனன்யா ராஜ் கூறியதாவது: மும்பை நகரில் உள்ள மூன்று கும்பல்களைப் பற்றிய கதை. குறிப்பாக தாதர் மற்றும் சிவாஜி பூங்கா இடையேயான பகுதிகளை மையமாகக் கொண்டது. நிறைய சேரிகள் உள்ளன, இங்குதான் இந்த கும்பல்கள் உள்ளன. அப்பகுதியில் வலுவான கேங்காக உருவெடுத்த மதராஸி கேங்கின் கதை இது.
என்னுடைய கேரக்டரின் பெயர் சரிதா, சேரிகளில் வளர்ந்தவள். மகாராஷ்டிரா கேங்கை சேர்ந்தவள். கேங்க்ஸ்டர்களில் ஒருவரின் காதலியாக நடித்திருக்கிறேன். உண்மையில் மூன்று மொழிகளில் படமாகி உள்ளது. தமிழில் பேசுவது கடினமாக இருந்தது. படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. ஆகஸ்ட் மாதம் வெளிவருகிறது. விரைவில் ஒரு நேரடி தமிழ் படத்தில் நடிக்க இருக்கிறேன். என்கிறார் அனன்யா.