விஜய்யின் 'சச்சின்' படத்தின் டிரைலர் வெளியானது! ஏப்ரல் 18ல் ரீரிலீஸ்! | மகள் நந்தனாவின் 14ம் ஆண்டு நினைவு நாளில் பாடகி சித்ரா வெளியிட்ட நெகிழ்ச்சி பதிவு! | வெளியீட்டுத் தேதிகளுடன் அடுத்தடுத்து வரிசை கட்டும் படங்கள் | டென் ஹவர்ஸ் : மீண்டும் ஒரு திருப்பத்திற்காக காத்திருக்கும் சிபிராஜ் | 'நம்பிக்கை உறுதி ஆவணத்தில்' கையெழுத்திட்ட பவன் கல்யாண் மனைவி | ஏப்., 18ல் ரெட்ரோ பட இசை வெளியீட்டு விழா | மலையாளத்தில் அறிமுகமாகும் பிரீத்தி முகுந்தன் | ‛மதராஸி' படம் செப்.5ம் தேதி திரைக்கு வருகிறது | ஒத்த ரூவாய்க்கு ரூ.5 கோடி கேட்ட இளையராஜா : குட் பேட் அக்லி தயாரிப்பாளருக்கு நோட்டீஸ் | 4கே தொழில்நுட்பத்தில் மீண்டும் வெளியாகும் 'கேப்டன் பிரபாகரன்' |
தெலுங்குத் திரையுலகத்தில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் பவன் கல்யாண். கடந்த சில வருடங்களாக தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இருப்பினும் அடுத்த ஆந்திர சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயல்பட்டு வருகிறார். அதற்கான முன்னேற்பாடுகளை இப்போதே செய்ய ஆரம்பித்துவிட்டார்.
அக்டோபர் 5ம் தேதி முதல் பேருந்து பிரச்சாரப் பயணம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளார் பவன் கல்யாண். அதற்காக அவருடைய பாதுகாப்புக்கென 8 கருப்பு நிற ஸ்கார்ப்பியோ வண்டிகளை வாங்கியுள்ளார். அந்த வண்டிகள் நேற்று பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி அலுவலகத்திற்கு வந்து சேர்ந்துள்ளன. இந்த 8 வண்டிகளும் பவன் கல்யாண் மேற்கொள்ள உள்ள பேருந்து பிரச்சாரப் பயணத்தின் அவருடைய 'கான்வாய்' ஆக செல்ல உள்ளதாம். சுமார் ஒன்றரை கோடி ரூபாய் செலவில் இந்த வண்டிகளை பவன் கல்யாண் அவரது சொந்தப் பணத்தைக் கொடுத்து வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
இந்த செய்திகள் வர ஆரம்பித்ததில் இருந்து சமூக வலைத்தளங்களில் பவன் கல்யாணைக் கிண்டலடித்தும் வருகிறார்கள்.