மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
திரையரங்குளில் திரைப்படங்கள் திரையிடப்படும்போது புகைபிடிக்கும் காட்சியோ, மது அருந்தும் காட்சியோ வரும்போது திரையின் இடது ஓரத்தில் எச்சரிக்கை வாசகம் இடம்பெறுவது வழக்கத்தில் இருக்கிறது.
இதேபோன்று சண்டை காட்சிகள் வரும்போதும், ரத்தம் காட்டப்படும்போது. இந்த காட்சிகளில் வரும் ஆயுதங்கள் காகித அட்டையில் செய்யப்பட்டவை, ரத்தம் வெறும் கலர்பொடி என்ற வாசகம் இடம் பெற வேண்டும் என்று கூறி வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த இரண்டு நீதிபதிகள் அடங்கிய பென்ஞ் "தகுந்த ஆதாரம் இன்றி பொதுநல வழக்கு தொடரக்கூடாது. அதுவும் வழக்கறிஞர்கள் பொதுநல வழக்கு தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. எனவே மனுதாரருக்கு அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்கிறோம்" என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து மனுவை திரும்ப பெற்றுக் கொள்வதாக வழக்கறிஞர் கேட்டுக் கொண்டதை தொடர்ந்து மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.