கலைமாமணி விருது பெற்றனர் சாய் பல்லவி, அனிருத், விக்ரம் பிரபு | மீண்டும் தனுஷ் படத்திற்கு இசையமைக்கும் அனிருத் | டியூட் சமூகப் பிரச்னையை வெளிச்சம் போட்டு காட்டும் : சொல்கிறார் பிரதீப் ரங்கநாதன் | கமலுக்கு அடுத்து அழகான ஹீரோ ஹரிஷ் கல்யாண் தான் : சொல்கிறார் இயக்குனர் மிஷ்கின் | ரஜினியின் வேட்டையன் வெளியாகி ஓராண்டு நிறைவு : இயக்குனர் ஞானவேல் வெளியிட்ட பதிவு | கணவரின் ஆயுள் நீடிக்க காஜல் அகர்வால் கர்வா சவுத் பூஜை | பிளாஷ்பேக்: ரஜினி படத்தில் நடிக்க மறுத்த சிவாஜி | பிளாஷ்பேக் : 36 ஆண்டுகள் இருட்டு அறையில் தனிமையில் வாழ்ந்த நடிகை | முதல் படத்திலேயே ஆக்ஷன் ஹீரோயின் ஆன சுஷ்மிதா சுரேஷ் | 'பேட்டில்' படத்தில் ராப் பாடகரின் வாழ்க்கை |
தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்தியா சினிமாவில் இந்த வாரம் பரபரப்பை ஏற்படுத்திய திருமணமாக நயன்தாரா, விக்னேஷ் சிவன் திருமணம் அமைந்தது. சென்னையில் இரு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற அவர்களது திருமணத்தில் பல சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
சில பல வருடங்களாகக் காதலித்து வந்த நயன்தாரா, விக்னேஷ் சிவன் தங்கள் திருமணத்தை முன்னிட்டு இருவரும் ஒருவருக்கொருவர் பல கோடி மதிப்புள்ள பரிசுகளை பரிமாறிக் கொண்டுள்ளனர். நயன்தாராவிற்காக விக்னேஷ் சிவன் 5 கோடி மதிப்புள்ள வைர மோதிரம், 3 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பரிசளித்துள்ளாராம். அது போல நயன்தாரா திருமணத்திற்கு முன்பே விக்னேஷ் சிவனுக்காக 20 கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய பங்களா ஒன்றை வாங்கி, அதை திருமணப் பரிசாகக் கொடுத்தாராம். இப்படி நேற்று முதலே செய்தி சுற்றிக் கொண்டிருக்கிறது.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் இதுவரை வெளிவந்த படங்களில் 'நானும் ரௌடிதான், காத்து வாக்குல ரெண்டு காதல்' ஆகிய படங்கள்தான் குறிப்பிடத்தக்க வெற்றியைப் பெற்றுள்ளது. அவரது முதல் படமான 'போடா போடி' ஓடவில்லை. சூர்யா நடித்த 'தானா சேர்ந்த கூட்டம்' படமும் வியாபார ரீதியாக தோல்வியைத் தழுவிய படமாக அமைந்தது. அதற்குள் விக்னேஷ் சிவன் 10 கோடி வரை சம்பாதித்து தனது மனைவி நயன்தாராவிற்கு பரிசளித்தார் என்பதெல்லாம் நம்பும்படியாக இல்லை என்று கோலிவுட்டில் கிசுகிசுக்கிறார்கள்.
நயன்தாரா புதிதாக 20 கோடியில் வீடு வாங்கினார் என்பதை வேண்டுமானால் நம்பலாம் என்கிறார்கள். இந்த புது வீட்டிற்கு புதுமணத் தம்பதியினர் விரைவில் குடியேறுவார்கள் எனத் தெரிகிறது.