மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை நடைபெற்றுள்ளது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஒரு மெசேஜ் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்துள்ளது. அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள் நல்ல தருணங்களில் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றியது.
இன்று முதல் என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே, இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகம் கொள்கிறேன். எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன்பு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று விக்னேஷ்சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.