இன்பன் உதயநிதி ஹீரோவாகும் படம் : மாரி செல்வராஜ் இயக்குகிறாரா? | இந்த வார ஓடிடி ரிலீஸ்...... நீங்கள் எதிர்பார்த்த 'வார்-2' முதல் 'பாம்' வரை...! | ஜட்ஜ் ஆக நடிக்கும் சோனியா அகர்வால் | புதிய இசை நிறுவனம் தொடங்கிய ஐசரி கணேஷ் | பிளாஷ்பேக் : தங்கை கேரக்டரில் அதிகம் நடித்த நடிகை | வைக்கப்பட்ட சீல் அகற்ற துணை முதல்வர் உத்தரவு, 'கன்னட பிக் பாஸ்' தொடர்கிறது… | ராட்சசன், ஆர்யன் இரண்டும் வேறு வேறு கதை களம்: விஷ்ணு விஷால் | பிளாஷ்பேக் : வாரிசு அரசியலை விமர்சித்த கருணாநிதி | விஜய் சேதுபதி படத்திற்கு இசையமைக்கும் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் | 'பாகுபலி 3' எதிர்காலத்தில் உருவாகுமா? |
நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவனின் திருமணம் இன்று காலை நடைபெற்றுள்ளது. முன்னதாக அதிகாலை 3 மணிக்கு விக்னேஷ்சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நயன்தாராவுக்கு ஒரு மெசேஜ் பதிவிட்டுள்ளார். அது தற்போது வைரலாகி வருகிறது. அதில், கடவுளுக்கு நன்றி. என் வாழ்க்கை அழகான மனிதர்களால் கடந்து வந்துள்ளது. அதற்கும் நன்றி. நல்ல உள்ளங்கள் நல்ல தருணங்களில் நல்ல மனிதர்களின் ஆசீர்வாதங்கள் எனக்கு கிடைத்துள்ளது. ஒவ்வொரு நாளும் படப்பிடிப்பில் அழகான விஷயங்கள் வாழ்க்கையை அழகாக மாற்றியது.
இன்று முதல் என் வாழ்வு நயன்தாராவுக்காக அர்ப்பணிக்கப்படுகிறது. என் தங்கமே, இன்னும் சில மணி நேரங்களில் நாம் இருவரும் ஒன்றாகவே மாறப்போவதை நினைத்து உற்சாகம் கொள்கிறேன். எல்லா நன்மைக்காகவும் இறைவனை பிரார்த்திக்கிறேன் மற்றும் எதிர்நோக்குகிறோம். எங்கள் அன்பான குடும்பம் மற்றும் சிறந்த நண்பர்களின் முன்பு அதிகாரப்பூர்வமாக ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்குகிறோம் என்று விக்னேஷ்சிவன் அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.