சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாகும் கயாடு லோகர், கல்யாணி பிரியதர்ஷன் | ஜப்பானில் தனுஷ், மாரி செல்வராஜ் படத்தின் படப்பிடிப்பு | சர்தார் 2 படப்பிடிப்பு நிறைவு பெற்றது | கமல்ஹாசன் தயாரிப்பில் அருண் குமார்? | தொகுப்பாளினி.... டூ நடிகை.... : நவீனாஸ்ரீயின் நம்பிக்கை | அபுதாபி ரிசார்ட்டில் நீச்சல் உடையில் சமந்தா | கூடுதல் காட்சிகளுடன் ஓடிடியில் 'விடுதலை 2' டைரக்டர்ஸ் கட் | ஆர்யா 36வது படத்தின் டைட்டில் டீசர் நாளை வெளியாகிறது | எமனுக்கு எமன், பாட்ஷா, அன்னபூரணி : ஞாயிறு திரைப்படங்கள் | ஜூன் 13ல், 500 தியேட்டர்களில் படை தலைவன் ரிலீஸ் |
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விக்னேஷ் சிவன் - நயன்தாரா தம்பதியர் வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்தார்கள். அதையடுத்து தங்கள் குழந்தைகளுடன் தாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவ்வப்போது வெளியிட்டபோதும் அவர்களின் முகத்தை இதுவரை வெளி உலகிற்கு காண்பிக்காமல் இருந்து வருகிறார்கள்.
இந்நிலையில் அஜித்தின் 62வது படத்திலிருந்து விலகிய விக்னேஷ் சிவன் அதையடுத்து விஜய் சேதுபதி - அபிஷேக் பச்சனை வைத்து ஒரு பான் இந்தியா படத்தை இயக்கப் போவதாக கூறப்படுகிறது. கேங்ஸ்டர் கதையில் உருவாகும் இந்த படத்திற்காக பாலிவுட் எழுத்தாளர் ஒருவர் கதை எழுதி வருகிறாராம். அதன் காரணமாக தற்போது விக்னேஷ் சிவன் மும்பையில் முகாமிட்டு உள்ளாராம். அதேபோல் நயன்தாராவும் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் ஜவான் படத்திற்காக மும்பையில் இருக்கிறார். இதன் காரணமாக இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளை மும்பைக்கு கொண்டு சென்று தங்களுடன் வைத்திருக்கிறார்கள்.
இந்த நிலையில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் ஆகியோர் மும்பை விமான நிலையத்திற்குள் தங்களது இரட்டை குழந்தைகளுடன் செல்லும் புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.