காதலருடன் ஹூமா குரேஷிக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா? | ரோபோ சங்கர் நினைவாக குபேரர் கோவிலுக்கு ரோபோ யானையை பரிசளித்த நடிகர் டிங்கு! | தீபாவளிக்கு 'கருப்பு' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியாகிறது! | ஹாட்ரிக் அடிக்கிறாரா பிரதீப் ரங்கநாதன் | ராஜமவுலி தயாரிப்பில் பஹத் பாசில் புதிய பட படப்பிடிப்பு துவங்கியது! | இசைத்துறையில் சாதிக்க என்ன செய்ய வேண்டும்? அழகாக சொல்கிறார் அனுராதா ஸ்ரீராம் | 'காந்தாரா சாப்டர் 1' ஹிட்: ஆன்மிக பயணம் செல்லும் ரிஷப் ஷெட்டி | ரஜினி பிறந்தநாளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை! | இயக்குனர் கென் கருணாஸ் உடன் இணைந்த ஜி.வி. பிரகாஷ்! | 'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் |
தமிழ் சினிமாவில் கடன் வாங்காமல் பணம் எடுக்கும் தயாரிப்பாளர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அப்படி கடனே வாங்காமல் தங்களது சொந்த பணத்தை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்கள் மிக மிகக் குறைவு.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கமல்ஹாசன் கூட 'விக்ரம்' படத்தை கடன் வாங்கித்தான் எடுத்துள்ளார். அப்படத்தின் உதவி இயக்குனர்களுக்கு மோட்டார் பைக் வழங்கிய நிகழ்வில் பைனான்சியரான மதுரையைச் சேர்ந்த அன்புச்செழியன் உடனிருந்தார். 'விக்ரம்' பட நிகழ்வில் அவர் ஏன் இருக்கிறார் என ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டனர்.
அவரிடம்தான் படத்திற்காக கமல்ஹாசன் கடன் வாங்கினாராம். படத்தை மொத்தமாக உதயநிதி ஸ்டாலினிடம் கொடுத்துவிட்டு நல்ல லாபத்தைப் பார்த்துள்ளார் கமல்ஹாசன். அதனால், படம் வெளியான ஒரு சில நாட்களிலேயே வாங்கிய கடனையும் அடைத்துவிட்டார். கமல்ஹாசன் முதல் முறையாக கையெழுத்திட்டு கடன் வாங்கியது இப்போதுதானாம். அவருடைய தயாரிப்பு நிறுவனத்திற்காக இதுவரை கையெழுத்திட்டு கடன் வாங்கியது அவருடைய மறைந்த சகோதரர் சந்திரஹாசன். அவரது மறைவுக்குப் பின் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தை கமல்ஹாசன்தான் தற்போது நிர்வகித்து வருகிறார்.
தொடர்ந்து மற்ற முன்னணி நடிகர்களை வைத்தும் படங்களைத் தயாரிக்க கமல்ஹாசன் முடிவு செய்துள்ளாராம். விஜய் உள்ளிட்ட சிலரிடம் அது பற்றி பேச்சு வார்த்தை நடந்து வருவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.