வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகத்தான் முன்னணி நடிகர்கள் நடித்து வெளியாகும் படங்களுக்கு வெளியீட்டுத் தினத்தன்று மிக மிக அதிகமான பரபரப்பு ஏற்படுகிறது. குறிப்பாக ரஜினிகாந்த், விஜய், அஜித் ஆகியோர் தான் அப்படிப்பட்ட பரபரப்பை ஏற்படுத்தி வருபவர்கள். அந்த வரிசையில் தற்போது கமல்ஹாசனும் இணைந்துள்ளார்.
கமல்ஹாசன் நடித்து தமிழில் கடைசியாக வெளிவந்த 'விஸ்வரூபம் 2' படத்திற்குக் கூட அதிகாலை காட்சிகள் நடைபெறவில்லை. எங்கோ ஒரு சில இடங்களில் மட்டும் காலை சிறப்புக் காட்சிகள் நடைபெற்றது. அதற்குக் கூட பெரிய அளவில் வரவேற்பு இல்லை.
ஆனால், லோகேஷ் கனகராஜ், அனிருத், விஜய் சேதுபதி, பகத் பாசில் என இப்போதைய பரபரப்பு கலைஞர்களுடன் கமல்ஹாசன் கூட்டணி சேர்ந்திருப்பது அவருடைய படங்களுக்கான கமர்ஷியல் கண்ணோட்டத்தை முற்றிலும் மாற்றிவிட்டது. 'விக்ரம்' படத்திற்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் 500 ரூபாய் என அநியாய விலையில் விற்கப்பட்டாலும் கமல்ஹாசன் ரசிகர்கள் அதை பெருவாரியாக வாங்கிவிட்டார்கள். படம் வெளியாகும் ஜுன் 3ம் தேதி நாளன்று மட்டுமல்லாமல் சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் பல தியேட்டர்களில் முன்பதிவு சிவப்பில் தான் காட்டுகிறது.
புதிதாக முன்பதிவை ஆரம்பித்துள்ள தியேட்டர்களில் மட்டும் டிக்கெட்டுகள் இருக்கின்றன. இப்படி ஒரு ஆரம்ப கட்ட வரவேற்பை கமல்ஹாசன் எதிர்பார்த்திருக்கவே மாட்டார் என கோலிவுட்டில் மட்டுமல்ல தியேட்டர்காரர்களும் மகிழ்கிறார்கள்.