போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து | வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா மற்றும் பலர் நடித்து வெளிவந்த படம் 'காத்துவாக்குல ரெண்டு காதல்'. இப்படம் விமர்சன ரீதியாக பெரிய அளவில் வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் போட்டிக்கு வேறு எந்தப் படங்களும் இல்லாத காரணத்தால் ரசிகர்களின் வரவேற்பை ஓரளவிற்குப் பெற்றது. முன்னணியில் உள்ள இரண்டு கதாநாயகிகளுடன் ஒரு காதல் கதை என்பதால் ரசிகர்கள் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் தியேட்டர்கள் பக்கம் சென்றனர்.
படம் வெளியாகி இன்றுடன் ஒரு மாதம் ஆகியுள்ள நிலையில் 66 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக போஸ்டர் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் படத்தின் இயக்குனர் விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார். “எங்களது பணியில் திருப்தி அடைவதற்குப் போதுமான காரணங்களைத் தந்ததற்காக, உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு நன்றி. உங்களை மனதில் வைத்து ஒரு பொழுதுபோக்குத் திரைப்படத்தை உருவாக்க விரும்பினோம். நீங்கள் வாங்கிய ஒவ்வொரு டிக்கெட்டிலும் உங்கள் அன்பைக் காட்டியுள்ளீர்கள். உங்கள் அன்பிற்கு எப்போதும் நன்றியுள்ளவள்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஜய் சேதுபதியின் அடுத்த படமாக 'மாமனிதன்' படம் அடுத்த மாதம் வெளிவர உள்ளது. நயன்தாரா நடித்து அடுத்த படமாக 'ஓ 2' ஓடிடியில் வெளியாக உள்ளது. விக்னேஷ் சிவன் அடுத்து அஜித் நடிக்கும் படத்தை இயக்கப் போகிறார்.