லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித் , ஷாலினி ஆகியோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்துள்ளார் தயாநிதி. அதோடு, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு அவரைச் சுற்றி இருக்கும் பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அவரது மனைவி அனுஷாவும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் இரண்டு நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக வேறு யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது. உண்மையில் ஒரு அல்டிமேட் மாலை என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி திடீரென்று அஜித் குடும்பத்தினருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாநிதி அழகிரி வெளியிட்டதை அடுத்து ஒருவேளை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறாரா, அதற்கான சந்திப்பாக இது இருக்குமா என ரசிகர்கள் ஆயிரம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.