உஸ்தாத் பகத்சிங் படத்தின் படப்பிடிப்பை முடித்த பவன் கல்யாண் | பிளாஷ்பேக்: 'விமர்சனப் போட்டி' என்று விளம்பரம் செய்து, விடை தெரியாமல் போன “உலகம்” திரைப்படம் | 'ஹவுஸ் மேட்ஸ்' மூலம் தமிழுக்கு வரும் அர்ஷா பைஜு | ரஜினி நடிக்கும் கூலி படக்கதை என்ன? ஆகஸ்ட் 2ல் டிரைலரில் தெரியும்...! | குற்றம் கடிதல் 2 உருவாகிறது : கதைநாயகன் ஒரு நல்லாசிரியர் | ரத்து செய்யப்பட்ட இசை நிகழ்ச்சியை மீண்டும் நடத்தும் அனிருத் | பிளாஷ்பேக்: வில்லனை ஆதரித்த கமல் | பிறந்தநாளில் ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய தனுஷ் | பிளாஷ்பேக்: டைட்டிலில் பெயர் போட்டுக்கொள்ளாத தயாரிப்பாளர் | எம்ஜிஆர் - கருணாநிதி, நட்பு, மோதல் தழுவலில் 'காந்தா'? |
அஜித் நடித்த 50வது படமான மங்காத்தாவை தனது கிளவுட் நைன் மூவீஸ் சார்பில் தயாரித்தவர் தயாநிதி அழகிரி. வெங்கட் பிரபு இயக்கிய இந்த படத்தில் அஜித் நெகட்டிவ் ரோலில் நடித்திருந்தார். அவருடன் திரிஷா, லட்சுமி ராய், பிரேம்ஜி உட்பட பலர் நடித்தார்கள். யுவன் சங்கர்ராஜா இசை அமைத்தார். இந்த படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்நிலையில் நடிகர் அஜித் , ஷாலினி ஆகியோருடன் இருக்கும் லேட்டஸ்ட் போட்டோவை பகிர்ந்துள்ளார் தயாநிதி. அதோடு, சும்மாவா சொன்னாங்க அல்டிமேட்ன்னு அவரைச் சுற்றி இருக்கும் பொழுது கிடைக்கும் எனர்ஜியை வார்த்தையால் விவரிக்க முடியாது என்று பதிவிட்டுள்ளார். அதேபோல் அவரது மனைவி அனுஷாவும் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், சினிமாவில் இருக்கும் இரண்டு நடிகர்களின் ஆற்றலுக்கு ஈடாக வேறு யாரும் இருக்க முடியாது. அவர்கள் வாழ்க்கை அழகாக இருக்கிறது. உண்மையில் ஒரு அல்டிமேட் மாலை என்று பதிவிட்டு இருக்கிறார். இப்படி திடீரென்று அஜித் குடும்பத்தினருடன் தாங்கள் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தயாநிதி அழகிரி வெளியிட்டதை அடுத்து ஒருவேளை மங்காத்தா படத்தின் இரண்டாம் பாகத்தை தயாரிக்க போகிறாரா, அதற்கான சந்திப்பாக இது இருக்குமா என ரசிகர்கள் ஆயிரம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.