வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி | ரீ என்ட்ரி தரும் அப்பாஸ் | திருமணம் பற்றி த்ரிஷா சொன்ன 'தக் லைப்' | நள்ளிரவில் போன் செய்து கஞ்சா கேட்டார் : மஞ்சும்மேல் பாய்ஸ் நடிகர் மீது தயாரிப்பாளர் குற்றச்சாட்டு | தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் 5 படங்கள்...!! | இன்ஸ்டாகிராம் மட்டுமல்ல போன் நம்பரையும் ஹேக் செய்து விட்டார்கள் ; நடிகை லட்சுமி மஞ்சு விரக்தி | மோகன்லால் மகனின் காதல் கல்யாணியுடன் அல்ல ; பிரபல தயாரிப்பாளர் வெளியிட்ட ரகசியம் |
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்துள்ள விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரைக்கு வருகிறது. நான்கு வருடங்கள் கழித்து கமல் நடிப்பில் வெளியாகும் படம் இது. அதோடு விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் ஆகியோருடன் சூர்யாவும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருப்பதால் இந்தப் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக, கமல் ரசிகர்களுக்கு இணையாக சூர்யா ரசிகர்களும் இந்த படத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள். மேலும் இந்த விக்ரம் படத்திற்கு மேயாதமான், ஆடை போன்ற படங்களை இயக்கிய ரத்னகுமார் வசனம் எழுதியிருக்கிறார். இவர் அளித்த ஒரு பேட்டியில், இப்படத்தில் சூர்யாவின் கேரக்டர் குறித்து ஒரு தகவல் அளித்துள்ளார். அதில், விக்ரம் படத்தில் சூர்யாவின் கதாபாத்திரம் வலிமையானதாகவும் எனர்ஜிடிக்காகவும் இருக்கும். சூர்யா திரையில் தோன்றும் காட்சிகள் ரசிகர்களை கவர கூடியதாக இருக்கும். அவரது கெட்டப்பை நடிப்பை ரசிகர்கள் வெகுவாக ரசிப்பார்கள் என்றும் தெரிவித்திருக்கிறார்.