கத்தியை அந்தரத்தில் சுழற்றியபடி கேக் வெட்டிய பாலகிருஷ்ணா | பிரேமலு 2 தாமதம் ஏன் ? தயாரிப்பாளர் தகவல் | ராம்சரண் தயாரிக்கும் முதல் படத்தின் படப்பிடிப்பில் தண்ணீர் டேங்க் உடைந்து விபத்து | பிறந்தநாள் பார்ட்டியில் போதைப்பொருள் : புஷ்பா பாடகி மீது வழக்கு பதிவு | ஊர்வசி மறுத்திருந்தால் மகள் நடிகையாகி இருக்க மாட்டார் : கண் கலங்கிய மனோஜ் கே ஜெயன் | ரிவால்வர் ரீட்டா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | அல்லு அர்ஜுனுக்கு பதில் ஜுனியர் என்டிஆரை இயக்கும் திரி விக்ரம் | நாளை வெளியாகும் ‛குபேரா' படத்தின் டிரைலர் | ‛கூலி' படத்தின் தெலுங்கு வியாபாரம் தொடங்கியது | அல்லு அர்ஜுன் - திரிவிக்ரம் சீனிவாஸ் படம் டிராப் ? |
தென்னிந்திய சினிமாவின் அசைக்க முடியாத ஆளுமையாக இருந்தவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம். இந்திய மொழிகளில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார். 6 தேசிய விருதுகளையும், 30க்கும் மேற்பட்ட மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் விருதுகளையும் பெற்றவர். தயாரிப்பாளர், நடிகர் எனவும் திரைத்துறைக்கு பணியாற்றி உள்ளார்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு காலமானார். இந்த நிலையில் வரும் ஜூன் 4ம் தேதி எஸ்.பி.பாலசுப்பிரமணியத்தின் 75வது பிறந்த நாளை அவரது மகனும், நடிகரும், பாடகரும், தயாரிப்பாளருமான எஸ்.பி.பி.சரண் சிறப்பாக கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார்.
ஜூன் 4ம் தேதி 'எஸ்பிபி லைவ்சன்' என்ற பெயரில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்துகிறார். இந்த நிகழ்ச்சியில் பி.சுசீலா மற்றும் எஸ்.ஜானகி, இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல இசைக் கலைஞர்கள் கலந்து கொள்கிறார்கள். நிகழ்ச்சி நடக்கும் இடம் பற்றிய விபரம் விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.