இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி, ஓ சொல்றியா மாமா என இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார்.
இந்த நிலையில் புஷ்பா -2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் -2 படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது சுகுமாரும் புஷ்பா- 2 படத்தை அந்த படத்துக்கு இணையாக பிரமாண்டமான காட்சிகளை கொண்டு உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.