விமான விபத்து ரொம்ப வருத்தமா இருக்கு: ரஜினி கவலை | சிம்பு, வெற்றிமாறன் கூட்டணியில் இணையும் பிரபலங்கள் | ஜுன் 20ல் மும்முனைப் போட்டி | அதிக நேரம் ஓடும் படங்களில் 5வது இடம் பிடித்த 'குபேரா' | விஜய் சேதுபதி - பூரி ஜெகன்னாத் படத்திற்கு ஹிந்தியில் தலைப்பு? | நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் |
சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்பட பலரது நடிப்பில் வெளியான புஷ்பா படம் தெலுங்கு, தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியான இப்படம் 350 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்த படத்தில் இடம்பெற்ற சாமி சாமி, ஓ சொல்றியா மாமா என இரண்டு பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. ஓ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா நடனம் ஆடி இருந்தார்.
இந்த நிலையில் புஷ்பா -2 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க இருப்பதாக டோலிவுட்டில் தகவல்கள் வெளியாகியுள்ளன. அதோடு, சமீபத்தில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிப்பில் வெளியான கேஜிஎப் -2 படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில் தற்போது சுகுமாரும் புஷ்பா- 2 படத்தை அந்த படத்துக்கு இணையாக பிரமாண்டமான காட்சிகளை கொண்டு உருவாக்குவதற்கு திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.