ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
கவுதம் மேனன், சிம்பு, திரிஷா கூட்டணியில் வெளியான படம் விண்ணைத்தாண்டி வருவாயா. 2010ஆம் ஆண்டில் வெளியான இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதையடுத்து அச்சம் என்பது மடமையடா படத்தைத் தொடர்ந்து தற்போது வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் கவுதம் மேனன் - சிம்பு கூட்டணி இணைந்திருக்கிறது. இந்த நிலையில் விண்ணைத்தாண்டி வருவாயா படத்தின் இரண்டாம் பாகம் உருவாகுமா? எப்போது உருவாகும்? என்று சிம்பு ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்தநிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கவுதம் மேனனிடத்தில் இதுபற்றி கேள்வி கேட்கப்பட்டது. அப்போது விண்ணைத்தாண்டி வருவாயா-2 படத்தின் ஸ்கிரிப்ட் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் அந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறி இருக்கிறார். அதோடு கொரோனா காலகட்டத்தில் கார்த்திக் டயல் செய்த எண் என்று ஒரு குறும்படத்தை எடுத்துள்ளேன். இது அப்படத்திற்கான ஒரு முன்னோட்டம் தான் என்றும் தெரிவித்திருக்கிறார்.