பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
2017-ம் ஆண்டில் தெலுங்கில் வெளியான 'அர்ஜுன் ரெட்டி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷாலினி பாண்டே. தமிழில் '100% காதல்', 'கொரில்லா', 'சைலன்ஸ்' போன்ற படங்களிலும் நடித்து இருக்கிறார். தற்போது ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக 'ஜெயேஸ்பாய் ஜோர்தார்' என்ற ஹிந்தி படத்தில் ஷாலினி பாண்டே நடித்துள்ளார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், ஷாலினி பாண்டே பேசும்போது, “நான் என்ஜினியரிங் படிக்க வேண்டும் என்பது எனது தந்தையின் விருப்பம். நானும் அவருக்காக படிக்கத் தொடங்கினேன். ஆனால் ஒரு கட்டத்தில் எனக்கு அது பிடிக்கவில்லை. எனக்கு சினிமாவில் நடிக்க வேண்டும் என்பது தான் ஆசை. இதற்காக வீட்டை விட்டு ஓடி வந்துவிட்டேன். மனதுக்கு கஷ்டம் தான். ஆனால் இப்போது பெற்றோர்கள் என்னை பெருமையாக நினைப்பார்கள் என்று நினைக்கிறேன்” என்று பேசியுள்ளார் .