இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு | ரஜினி, ஸ்ரீதேவி மாதிரி பிரதீப் ரங்கநாதன், மமிதா : டியூட் பட இயக்குனர் பேட்டி | அப்பா இறுதி ஊர்வலத்தில் அம்மா ஆடியது ஏன்? : ரோபோ சங்கர் மகள் பேட்டி | மீண்டும் பெரிய திரையில் ஐரா அகர்வால் |
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடித்துள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நேற்று வெளியாகி பாசிட்டிவான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த நிலையில் நயன்தாரா குறித்து வழக்கம் போல் உருகி உருகி ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.
அதில், ‛‛அன்புள்ள தங்கமே. இப்போது நீ என் கண்மணி. என்னுடைய வாழ்க்கையில் வலிமையின் தூணாக இருப்பதற்கு நன்றி. என்னுடைய முதுகில் தட்டிக் கொடுப்பதே ஒரு இனிமை. எனக்காக நீ இவ்வளவு அழகாக இருக்கிறாய். ஒவ்வொரு முறையும் நான் என் வாழ்வில் தாழ்வாக உணரும் போது நீ என்னுடன் இருக்கிறாய். என்னை முடிவுகள் எடுக்க வைத்தது மட்டுமின்றி நீ எவ்வளவு உறுதியாக இருந்தாய் என்பது நன்றாக தெரியும். என்னுடைய படத்தையும் முழுமை படுத்தியது நீதான். இந்த படத்தின் வெற்றி உன்னுடைய வெற்றி.
நீ திரையுலகில் ஜொலிப்பதை பார்க்கவும் மீண்டும் உன்னை இயக்கி மிகச் சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வருவதற்கு ஒரு இயக்குனராக மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. உன்னுடைய புத்திசாலித்தனம் எப்போதுமே என்னைக் கவரும். நாம் திட்டமிட்டபடி ஒரு நல்ல படத்தை இயக்கி காதம்பரிக்கு இணையான நல்ல கதாபாத்திரத்தை உருவாக்கி இருக்கிறோம் என்ற திருப்தி எனக்கு இருக்கிறது. கண்மணி உனக்கு பிடிக்கும் என் நம்புகிறேன். எல்லாம் காதலே நன்றி'' என அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார். அதோடு நயன்தாரா தன் முதுகில் தட்டிக் கொடுக்கும் ஒரு வீடியோவையும் பதிவிட்டுள்ளார்.