டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

கொரோனா காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக புதிய படங்களின் வெளியீடுகள் சிக்கலில் சிக்கித் தவிக்கிறது. இரண்டு வருடங்களுக்கு முன்பே முடிவடைந்த பல படங்கள் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. பெரிய நடிகர்களின் படங்களை வெளியிடுவதற்குத்தான் கொரோனா காலகட்டத்தில் தியேட்டர்கள் முன்னுரிமை கொடுத்தன. சிறிய பட்ஜெட் படங்களைப் பார்க்க யாருமே வரவில்லை என்பதே அதற்குக் காரணம்.
இந்நிலையில் ஒரு இடைவெளிக்குப் பிறகு இந்த வாரம் 6 படங்கள் வெளியாகியுள்ளன. நேற்று 'காத்து வாக்குல ரெண்டு காதல், ஹாஸ்டல்' ஆகிய படங்கள் வெளியாகின. இன்று 'கதிர், அமைச்சர், திவ்யா மீது காதல்' ஆகிய படங்கள் வெளிவந்துள்ளன. ஓடிடியில் 'பயணிகள் கவனிக்கவும்' படம் வெளியாகி உள்ளது.
இனி வரும் வாரங்களில் வாரத்திற்கு இரண்டு, மூன்று படங்களாவது வெளியாகும் எனத் தெரிகிறது. அடுத்த வாரம் மே 6ம் தேதி 'கூகுள் குட்டப்பா, விசித்திரன்' ஆகிய படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




