புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் சமந்தா. தற்போது விஜய் தேவரகொன்டா ஜோடியாக பெயரிடப்படாத புதிய தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் ஏப்ரல் 28ம் தேதி நள்ளிரவு வரை படப்பிடிப்பு நடைடபெற்றது. அப்போது நடுஇரவு 12 மணிக்கு சமந்தாவின் பிறந்தநாளைக் கொண்டாட படப்பிடிப்புக் குழுவினர் அவருக்குத் தெரியாமலேயே ஏற்பாடு செய்தனர்.
உண்மையாக படப்பிடிப்பு நடத்துவது போல ஒரு சோகமான காட்சியைப் படமாக்கினர். சமந்தாவும் சீரியசாக கண்ணீர் விட்டு நடித்துக் கொண்டிருக்க பதிலுக்கு வசனம் பேச வேண்டிய விஜய் தேவரகொன்டா, சமந்தாவின் கண்ணீரைத் துடைத்துவிட்டு 'சமந்தா, ஹேப்பி பர்த்டே' என வசனம் பேச மொத்த குழுவும் சமந்தாவிற்கு 'ஹேப்பி பர்த்டே' என சொல்லி கேக் வெட்டி கொண்டாடினர்.
நடந்தது படப்பிடிப்பு அல்ல, தன்னுடைய பிறந்தநாளுக்காக செய்யப்பட்ட செட்டப் எனத் தெரிந்து சமந்தா மகிழ்ச்சியுடன் கேக் வெட்டினார்.